90
ஞாயிறும் திங்களும்
வாஞ்சையினால் நம்பெரியார் செப்ப னிட்டு
வழியமைக்கப் பாடுபடுந் திறத்தைக் கண்டு காஞ்சிக்கும் ஈரோட்டுப் பாச றைக்கும்
கற்றறிந்த நம்அண்ணா வழிய மைத்தார்; தேன்சிதறும் பூஞ்சோலை பலப டைத்தார்;
தெளிநீரைத் தருகினறும் ஆக்கி வைத்தார்; தீஞ்சுவைசேர் கனிமரங்கள் பலவும் வைத்தார்;
சேர்ந்திளைஞர் அணிவகுத்து நடத்து வந்தார்.
உறுதிகொளும் நல்லிளைஞர் நடக்குங் காலை
உதவாத வல்வால்கள் பறந்து வந்தே உறுகனிகள் பலகவைத்துப் பறக்கக் கண்டோம் ;
ஒளித்திருந்த கள்வர்சிலர் சமயம் பார்த்துப் பொருள்பலவும் திருடிக்கொண் டோடக் கண்டோம் ;
பொறுமையிலார் இடையிடையே தொல்லை தந்து பொறுமுவதும் கேட்டிருந்தோம் எனினும் அண்ணன்
புதுவழியில் நடப்பதைநாம் நிறுத்த வில்லை.
திருவிடத்தின் பெருமையினை மீண்டுங் காணத்
தெளித்துணர்ந்து சிந்தித்துக் காஞ்சி அண்ணன் ஒருவழிதான் நமக்கெல்லாம் எடுத்து ரைத்தார்; உயர்தமிழும் தமிழினமும் உய்ய வேண்டி இருவழியைக் காட்டவில்லை ; குழப்ப வில்லை :
ஏகஇந்தி யாவென்று மழுப்ப வில்லை : வரும்வழியில் திசைமாறிப் போன மாந்தர்
வாயுளறல் சிரிப்புக்கே வழியைக் காட்டும்.
மடமையினைத் தகர்த்தெறிந்து சிந்தித் தாய்ந்து
மதிதன்னை வளர்க்கும்வழி, நலமே சேர்க்கும் கடமைவழி, கண்ணியமும் கட்டுப் பாடும்
கலந்தவழி, கருணைவழி, பண்பும் அன்பும் உடையவழி, உறுதிவழி, மானங் காக்க
உற்றவழி, குறல்நூலின் சங்க நூலின் இடைமருவும் தமிழர்வழி, காஞ்சிக் கோமான்
எந்நாளும் எடுத்துரைத்த வழியாம் கண்டீர்.