பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

ஞாயிறும் திங்களும்



வெற்றி மலர் சூடுங்கள் ! நம்மை வளர்த்துவிட்ட நல்லவன் தாயுளத்தை இம்மா நிலத்தே எவரிடத்துங் கண்டதில்லை! "பண்பட்ட தம்பியராம் பன்னுற்றின் ஆயிரவர் எண்ணிட்டுக் காட்ட இயலாரைச் சேர்த்தென்னைத் தாயொருத்தி தன்வயிறு தாங்காத காரணத்தால் போய்வயி றொவ்வொன்றும் புக்குப் பிறந்தோம்நாம்" என்று மொழிந்தவன்றன் ஈடில்லாப் பண்புளத்தை இன்று நினைத்தாலும் என்பெல்லாம் நெக்குருகும் ; நாட்டை வயமாக்கும் நாவல்லான், நற்றமிழை ஏட்டில் எழுதிமெரு கேற்றும் எழுத்தாளன், நாடும் அரசியலை நன்காய்ந்த பேரறிஞன், வாடும் எளியோர்க்கு வாழ்வு தரவந்தோன், நண்பாளன், பண்பாளன், நாடகத்துப் பேராசான், கண்போல வாய்த்தஒரு காஞ்சி புரத்தலைவன் என்றெல்லாம் நாட்டவர் ஏத்திப் புகழுரைத்தார்; ஒன்றாலும் நம்அண்ணன் உள்ளம் மயங்கவில்லை ; மாறாட்டம் இல்லாமல் மக்கள் நலங்கருதிப் போராட்டம் நூறு புரிந்தானைத் தன்னாட்டில் ஏழை துயர்துடைக்க வெஞ்சிறைகள் ஏற்றானைக் கோழை எனப்பழித்தான் கொள்கை சிறிதுமிலான், போராட்டம் என்றாலே போய்பதுங்கும் குள்ளநரி ஈரோட்டார் தந்தஅரி யேற்றைப் பழித்ததுகாண் ; அண்ணன் குடும்பத்தை அப்பிறவி ஏசிவந்த வண்ணம்போல் யாரும் வடிக்க இயலாது ; வஞ்சகத்தார் என்னென்ன வைதாலும் தாங்குகிற நெஞ்சத்தான் நம்அண்ணன் நின்றநிலை மாறவில்லை வாடி வதங்கவில்லை வாய்த்தஒரு போர்க்களத்தில் ஒடி ஒளியவில்லை ஊக்கங் குறையவில்லை ; மற்றவரைப் பாராட்டி வாயாரப் போற்றுவான் மற்றோர் தனைப்புகழ்ந்தால் மங்கைர்போற் கூசுவான் ;