பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

ஞாயிறும் திங்களும்



ஈரோட்டுப் பள்ளியிலே ஏடெடுத்துக் கற்றுணர்ந்து பாராட்டுங் காஞ்சிபுரப் பல்கலைசேர் மன்றத்தில் கற்றுத் தெளிந்து கலைஞர் எனும்பட்டம் பெற்றுத் திகழும் பெருமை மிகவுடையார் ; காற்றடித்த போதுங் கழகம் எனும்விளக்கை ஏற்றி அணையாமல் எந்நாளும் காக்கின்றார்; இன்றைக் கவர்பெருமை ஏற்றிளங் காளையர்க்கு நன்று தெரியாது நாளை புலனாகும். நாட்டை வளமாக்க நம்மினத்தை முன்னேற்றப் பாட்டை அமைக்கின்றார் பங்காளி ஆகிடுவோம்; விறுநடை போடுங்கள் வெற்றிமலர் சூடுங்கள்! கூறுகிறேன் என்கை குவித்து. ......9.1975 தொடர்ந்து செல்வேன் தனக்கென்று வழியமைத்துக் கொள்ள வில்லை தமிழினத்தின் வாழ்வுக்கே வழிய மைத்தான் ; எனக்கென்றவ் வழியொன்றே தேர்ந்து கொண்டேன்; இன்றுவரை பிறழாமல் ஒழுகு கின்றேன்; குணக்குன்றை ஒருநாளும் பழித்த தில்லை ; குறுக்குவழி சென்றதிலை , குழப்பம் செய்யப் பிணக்கொன்றும் விளைக்கவில்லை; அதனால் துன்பம் பெற்றதுண்டு ; வாழ்க்கைவளம் பெற்ற தில்லை. வளமற்ற நிலைகண்டோர் பரிந்து பேசி வாழவழி பலவுண்டு வருக என்றார்; உளமற்ற நிலைஎனக்கு வந்த தில்லை ; உறுதியுளேன் ஒருபொழுதும் வழுவ மாட்டேன்; தளர்வுற்ற எனக்கென்ன கிடைக்கு மென்று தரங்கெட்டுப் பிறர்வழியில் சென்ற தில்லை; வளமற்று வாழ்ந்தாலும் அண்ணன் சொன்ன வழிபெற்று வாழ்கின்றேன் தொடர்ந்து செல்வேன். 17-9-1978