பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'டானா' முத்து / 51



"சாமீ! சாமீ! சரணம்!" எனச்
சாதுவை வணங்கி உபசரித்தே
பூமியும், பொருளும் வரம் கேட்டார்!
புத்திரப் பேறுதனைக் கேட்டார்!

ஆசைக் கணவனின் குருடதுவும்
அகன்றே விழிகள் ஒளிபெறவும்
பூசை புரிந்தே சாதுவிடம்
புனிதை சுந்தரி வரம் கேட்டாள்!

"ஆஹா! உங்கள் தவம் நன்று!
அன்பும், பண்பும் மிகநன்றே!
"ஓஹோ எனவே புகழ்பெருகும்
ஒரே ஒரு வரமே நான் கொடுப்பேன்!

கணவனின் குருடு நீங்குவதா?
கன்னியின் மலடு நீங்குவதா?
பணமும் காசும் கலகலக்கப்
படுத்தும் வறுமை நீங்குவதா?

“எதுதான் வேண்டும் சொல்லிடுவீர்!
இவைகளில் ஒன்றே கேட்டிடுவீர்!
மெதுவாய்த் தயங்கிக் குழப்பாதீர்”
விரட்டினார் சாது இவ்வாறாய்!