இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54/வயலூர் சண்முகம்
"அன்பு; பண்பு; பொறுமையுடன்
அறிவு பக்தி சேர்ந்துவிட்டால்
துன்பம் எல்லாம் ஓடிவிடும்!
சுகமும் வளமும் கூடிவிடும்!
இந்த உண்மைத் தத்துவத்தை
யாவரும் உன்னால் உணர்ந்திடுவார்!
கந்தா! சுந்தரி! வாழ்க!” எனக்
கடவுளாம் சாதுவும் மறைந்து விட்டா
ஊனம்; வறுமை துன்பத்தால்
உள்ளம் தளரா தம்பதிகள்
"ஞானம்”, “பொறுமை” “பக்தி” களால்
நயந்த யாவும் அடைந்தார்கள்!
<><> <>