இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாமி வேலு என்பவன்தான்
சாது வான பையனாம்!
மாமி கோதை வீட்டுக்கே
மாடுகள் மேய்த்து வந்திட்டான்!
தங்க ராசு, அவன்மாமா!
தங்க மான மனிதர்தான்!
புங்கம் பட்டி ஊருக்குள்
பூமி சொத்து பெற்றிருந்தார்!
கோதை-ராசு தம்பதிக்கே
குடும்பத் தொழிலே பயிர்த்தொழில்தான்!
நாதன், நங்கை அவர் மக்கள்!
நமது வேலு பணியாள் தான்!