பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

13


சறுக்கு வண்டியில் தனது சிறிய மகன் இருப்பதைக் கவனித்ததும், ‘இங்கே பாரேன், அதுக்குள்ளே இந்தப் போக்கிரிப் பயல் வண்டியில் இடம் பிடித்து விட்டானே!’ என்று வியப்புடன் முனங்கினான் அவன்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் அன்று விருந்தாளிகளுடன் சேர்ந்து பருகிய மதுவின் காரணமாக ‘உளம் கிளர்ந்த’ நிலையிலிருந்தான். ஆகவே, தன்னுடையது என்று சொந்தம் பாராட்டிக் கொள்ளக்கூடிய எல்லா விஷயங்கள் பேரிலும், அவனுக்கு ஏகப்பட்ட பெருமை ஏற்பட்டிருந்தது. தான் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் அளவிலாத் திருப்தியே கண்டான் அவன். தன்னுடைய இளவரசு என்று அவன் மதித்து வந்த புத்திர பாக்கியத்தின் தோற்றமே அவனுக்குப் பேருவகை கொடுத்தது. அவன் தனது கண்களைக் குறுக்கிக் கொண்டு, பெரிய பற்களைக் காட்டியவாறே, மகனைக் கவனித்தான்.

அவனை வழி அனுப்புவதற்காகக் காத்திருந்த அவன் மனைவி தலைவாசலில் அவனுக்குப் பின்பக்கத்தில் நின்றாள். கருவுற்றிருந்த அவள் மெலிந்து உடல் வெளுத்துக் காணப்பட்டாள். அவள் தனது தலையையும் தோள்களையும் ஒரு போர்வையினால் மூடி மறைத்திருந்ததால், அவளது முகத்தில் கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தன. அவள் வாசல்படியிலிருந்து முன்னால் வந்து, பயந்த குரலில் சொன்னாள். ‘இப்போது நீங்கள் நிகிட்டாவையும் உங்களோடு கூட்டிக் கொண்டு போவது நல்லது’ என்று.

வாஸிலி ஆன்ட்ரீவிச் பதில் எதுவும் சொல்லவில்லை. அவளுடைய வார்த்தைகள் அவனுக்கு