பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

57

படி இருந்த அவனுக்கும் பேச்சிலே பங்கு கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும் என்றே தோன்றியது. ஆனாலும் அவன் தேநீர் குடிப்பதிலே மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், அவ்வப்போது வெறுமனே தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டிருந்தான். ஒன்றின் பின் ஒன்றாக அனேக தம்ளர் டீயைக் குடித்துத் தீர்த்தான் அவன். அதனால் கொஞ்சம் கொஞ்சமாகக் கதகதப்பு அதிகரிக்கப் பெற்று, முன்னைப் பார்க்கிலும் அதிகம் அதிகமாக சுக உணர்வை அவன் அனுபவிக்க முடிந்தது.

பேச்சு அந்த விஷயத்தைப் பற்றியே வெகுநேரம் வளர்ந்தது. பாகம் பிரிந்து போகிற குடும்பத்தில் ஏற்படும் அபாயங்களைப் பற்றித்தான். அது பொதுப்படையான சர்ச்சை அல்ல என்பது நன்கு தெளிவாயிற்று. அந்த வீட்டிலே முளைத்திருந்த பாகப்பிரிவினைப் பிரச்னை பற்றிய விவாதம்தான் நடந்து கொண்டிருந்தது. அங்கே கடுகடுப்பாக முகத்தை வைத்தபடி மௌனமாக உட்கார்ந்திருந்த இரண்டாவது மகன் தான் பாகப்பிரிவினை கோரியவன்.

உண்மையிலேயே துயரம் தரக்கூடிய விவகாரம் தான் அது. அந்தப் பிரச்னை அங்கிருந்த அனைவரது சிரத்தையையும் ஈர்த்திருந்தது. எனினும் அந்நியர் முன்னிலையில் தங்கள் சொந்த விவகாரங்களை விவாதிப்பது அழகல்ல என்று பொறுத்திருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் குடும்பத் தலைவன் தன்னைத் தானே கட்டுப்படுத்தி வைக்க முடியாதவனாகி விட்டான். தான் உயிரோடு இருக்கிற மட்டும் அந்தக் குடும்பத்தில் பிளவு உண்டாக்க இசையப் போவதில்லை என்று அவன், கண்களில் நீர் மல்க,