பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

121



ஆத்திரம் அவர் முகத்தில் ஜொலித்தது. “கோயிலுக்கு பூஜை செய்தாகணும். இன்னும் பொணத்தை தூக்கின பாடில்லை. யாரு தூக்குவாங்க? ஊரு கட்டுப்பாடாம்; ஊர் தலையிலே இடிவிழ!”

நான் பேசமுடியாமல் உட்கார்ந்திருந்தேன். ஆத்திரம் தனிந்ததும் அவர் சொன்னார். “பத்து மணிவரையில் பார்க்கப் போறேன். அப்புறம் நாதியில்லேன்னா, நாயனக்காரர் ரெண்டு ஆளை கொண்டாறேன்னிருக்காரு. நாலு பேருமா தூக்கிக் கொண்டு போயிடலாம்னு இருக்கிறோம். வேறே என்ன செய்யறது? கோயிலைத் திறந்தாகணும்.”

“நான் வாணா வரேன்?”

“நீங்களா? என்னத்துக்காக? பேசாம நல்ல புள்ளையா இருங்க. இது ரொம்ப ஆபத்தான சமாச்சாரம். தனியாளோட போடற சண்டையில்லே...”

“மோசமா போச்சு! பிழைக்க இடமா இல்லை வேறே?” என்று இழுத்தேன். எனக்கு பயமாகத்தான் இருந்தது.

“இதபாருங்க, எனக்காகச் சொல்ல வேணாம். நான் ஒண்ணும் உங்களைப் பற்றி தப்பா நெனைச்சுக்க மாட்டேன். நிசம்மா தைரியம் இருந்துதுன்னா வாங்க இல்லே... எனக்காக...”

“பரவாயில்லைங்க”

“என்னமோ உங்க இஷ்டம், ஆனா தெருவுக்கு மட்டும் விளக்கு கிடையாது. நாளை ராத்திரி வரையிலும் நிச்சயமாகக் கிடைாது. அந்த துர்க்கை அம்மனுக்கும் அந்த பொண்ணுக்கும் அவ்வளவு ராசி. விளக்கு கிடையாது இப்பவே சொல்லிப்பிட்டேன்-”

“சரி”

விளக்கை அணைத்து வாசல் கதவைச் சாத்திக் கொள்ளச் சொல்லிவிட்டுச் துண்டைபோட்டுக் கொண்டு கிளம்பினார் அவர். இருட்டில் தட்டித் தட்டி கிழக்கு வீதி வெளிச்சத்திற்கு வந்தோம்.