பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எம். வி. வெங்கட்ராம்

ணிக்கொடியில் கடைசிக் கொழுந்து என்று செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.வி. வெங்கட்ராம் கும்பகோணத்தில் பிறந்தவர். கு.ப.ரா. ந. பிச்சமூர்த்தி இவர்களின் ஊக்கத்தில் எழுதத் தொடங்கியவர். மணிக்கொடி அவருக்கு ஊக்கமளித்தது. இவர் எழுதிய கதைகளில் குறிப்பிடத்தக்கவை சிட்டுக்குருவி ‘தத்துப்பிள்ளை’ ‘சித்தக்கடல்’ பொதுவாய் இவர் கதைகளில் நுட்பமான உணர்வு நிலைகள் அதிகமாகக் காணப்படும்.

நாவல் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளார். ‘வேள்வித்தீ’ என்ற நாவல் செளராஸ்டிர இனத்தின் சமுதாயச் சித்தரிப்பு, வாழ்வியல் வளர்ப்பு. மற்றொரு சிறப்பான நாவல் ‘நித்திய கன்னி’ மனதில் எழும் பழம் நினைவுகளும், அதனால் விளையும் சிக்கல்களும் நிறைந்த சித்தரிப்பே. சமீபமாய் பேசப்பட்ட நாவலான காதுகள் இந்திய அரசின் சாகித்திய அகாடமியின் விருதினைப் பெற்றது. முன் கூறப்பட்டுள்ள இரண்டு நாவல்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கற்பனையின் கனவுக் கோட்டையே. வாழ்க்கைக்கும், படைப்புக்கும் தொடர்பே இல்லாத நாவல் என்று தான் சொல்லவேண்டும்.

“எம்.வி.வி அவர்களின் சிறுகதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. சுதந்திரமானவை. ‘ப்ரி பர்சனாலிட்டி’ உள்ளவை. மொத்தத்தில் தனித்துவம் வாய்ந்தவை. ஆனால் பல்வகையான பன்முக வார்ப்பு கொண்டவை.” - க.நா.சு