பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

சோலை சுந்தரபெருமாள்


தோழிகளுடன் பழகுகிறவள், இப்படிச் செய்தால், பேசினால்?

சில நாட்களுக்கு முன்னால்தான் நண்பர்கள் சிலர் அவனைக் காண வந்தனர். அவர்களுக்குப் காப்பி கொடுக்க விரும்பி அவர்களிடமும் சொல்லிவிட்டு, அவளிடம் தயாரிக்கும்படி சொன்னான். கொஞ்சநேரம் நண்பர்களிடம் பேசிவிட்டு உள்ளே சென்றான். காப்பி தயாராக இருக்கும் என்று, ஆனால் அவள் இருந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை.

“காப்பி போடவில்லையா?” என்று கேட்டான் திடுக்கிட்டு, நண்பர்களிடம் அவமரியாதை ஏற்படும் என்ற பயம்.

“இல்லை!”

“சொன்னேனே!”

“எனக்கு வேலை இருக்கிறது.”

“இதைவிடவா?” அவள் மெளனம் சாதித்தாள். நேரம் ஆகிவிட்டது. அவளுடன் பேசிக் கொண்டிருந்தால் வந்தவர்களை இன்னும் காக்க வைக்க நேரிடும். ஆகையால் மேலும் பேசாமல் அவர்களிடம் சென்று, “பால் முறிந்துவிட்டது. இதோ நொடியில் கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கிளப்புக்குக் கிளம்பினான்.

இன்னொருமுறை, பித்தம் மிகுந்ததால், மார்பில் ஒரே வலி. இரவு முழுதும் துாக்கம் இல்லாமல் துடித்துக் கொண்டிருந்தான். முதலில் அவன் சொன்னதன் பேரில் எதோ பற்றுப் பேட்டவள் பிறகு அவனை ஏனென்று கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

இந்த மாதிரி எத்தனை எத்தனையோ சிறு விஷயங்கள் தாம். என்றாலும் சிறு விஷயங்களின் கோவைதானே வாழ்க்கை? சிறு விஷயங்களில்தானே மனமும் பிரதிபலிக்கிறது? ஜன்னலுக்கு அருகில் நின்று மறுபடியும் எட்டிப் பார்த்தான். மூலைக்கு மூலை நகைகளைச் சிதறிவிட்டு, கோபக்கிருகத்தில் புகுந்துகொண்டு, முகம் கவிழ்ந்து அழுகின்ற கைகேயியைப் போல, நட்சத்திரங்களுக்கிடையில் உள்ள நிலவு கார் முகில் ஒன்றின் மீது உறங்கியது. அங்கு நிற்க மாட்டாமல், படுக்கையின் மீது விழுந்தான். ஆனால் மனசு நிச்சயமாகப் படுக்க மறுத்தது.

நாளுக்கு இரண்டு கணவர்கள் வீதம் விவாகமும், விவாகரத்தும் செய்து கொள்ளும் சினிமா நட்சத்திரங்களின் ஞாபகம் அவனுக்கு வந்தது. உயிரை மாய்த்தாலும் கணவன் கணவனே என்று உறுதி கொள்ளும் இந்தியப் பெண்ணையும் நினைத்தாள். இந்த இரண்டும் இல்லாது, இரண்டும் கெட்ட பெண்ணுடன் வாழ்க்கையும்...

எறும்பு உயர்ச்சிகளின் துள்ளலைத் தாள முடியவில்லை