பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவை. எஸ். ஆறுமுகம்

1927 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் பூவைமாநகரில் பிறந்து பூவைக்கு ‘பைரவி’ என்ற பெயரும் உண்டு.

தஞ்சை மருதநிலத்தை மக்கள் வாழ்க்கையோடு பின்னி யதார்த்தமான படைப்புகளைத் தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

அடக்கமானவர். கடல் முத்து, அமிர்தம், பூவையின் கதைகள், வேனில் விழா, அந்திமந்தாரை, இனிய கதைகள், திருமதி சிற்றம்பலம், தாய் வீட்டுச் சீர், அரண்மனைக் கோழி முட்டை சுட்டும் விழிச் சுடர்’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளைத் தந்தவர் பூவை.எஸ். ஆறுமுகம்.

‘உமா’ இதழில் பொறுப்பாசிரியராக நீண்ட காலம் இருந்து பணியாற்றினார். இன்னும் இதழ்களில் பணியாற்ற உற்சாகமுடையவராக இருப்பது அவருக்கு எழுத்தின் மீது இருக்கும் அளவற்ற உற்சாகத்தைக் காட்டுகிறது.

இருபதுக்கு மேற்பட்ட நாவல்கள் படைத்தவரின் ‘தங்கசம்பா’ மிகவும் குறிப்பிடத்தக்க நாவல், ‘பூவையின் கதைகள்’ சிறுகதைத் தொகுதி பல பரிசுகளைப் பெற்று சாதனையை தக்க வைத்துக்கொண்டது.