பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

சோலை சுந்தரபெருமாள்



பையிலே கையைவிட்டேன். பாம்புப்புற்றுக்குள்ளே கையை விட்டால் ரெம்ப சுகமாக இருக்கும். ஜிலுஜிலு என்று பேரானந்தம் உடம்பில் ஏறும். நித்திரை சுகதுக்கமற்ற நித்திரை. மூட்டை பூச்சிக் கடியில்லை. என்ன தொல்லையிது. தோள்பட்டை வரையில் கை உள்ளே போகிறது. மேலே போக கை நீளமில்லை. அட ஆண்டவனே? என்னமோ கையில் தட்டுப்படுகிறது. ஏதோ கடித்ததுபோல் இருந்தது. வெடுக்கென்று வெளியில் இழுக்கிறேன். பெண்டாட்டி கழுத்துச் சங்கிலி.

“இது ரெண்டு பவுனய்யா?”

“பணமா கொடுங்க சார்.”

“இது பணமில்லையாங்காணும்? பவுனய்யா பவுன். ரெண்டு பவுன். இருபத்திரெண்டு காரட், மாமியார் வூட்டுலே செஞ்சு போட்டது.”

“...”

“என்னய்யா ஊமை மாதிரி உட்கார்ந்து இருக்கிறிர்? எங்க அம்மா செய்தது இல்லைங்காணும். மாமியார் வூட்டுலே செஞ்சது. பதினாலு காரட் இல்லே, ஸ்மக்ளிங் கோல்ட், திருட்டுத்தனமாக ஆசாரியை அடுப்பங்கரையிலே கொண்டு வந்து செய்யச் சொன்னது.

“...”

“கொஞ்சம் இமைச்சுப் பாருங்க. பயமா இருக்குது. பொணமும் தெய்வமும்தான் கண்ணை இமைக்காது. நீங்க பொணமா இல்லை தெய்வமா சொல்லுங்க? எனக்குப் பயமா இருக்குது. ஓகோ. பதினாலு காரட்டுன்னு சந்தேகமா? அதான் மாமியார் செஞ்சதுங்கிறனே. பதினாலு காரட்டுன்னு அவ எனக்குப் பெண்டாட்டி இல்லேங்காணும், அவ அம்மாவுக்கு மக!”

நகையை வாங்கிப் பையிலே போட்டுக்கிட்டான். ரெண்டு தாளை எடுத்தான். அதை வெட்டி இதிலே ஒட்டி. இதை வெட்டி அதிலே ஒட்டுனான்.

“என்னாய்யா இது?”

“டிக்கட்.”

“இதுதான் டிக்கட்டா?”

“ஆமாம்.”

“ஆட்டைத் தூக்கி மாட்டுலே போடு. மாட்டைத் தூக்கி ஆட்டிலே போடுங்கறததான் டிக்கட்டா?”

“ஆமாம்.”

“இதை நான்தான் செய்யனுமா?”

“ஆமாம்.”

“நீ செஞ்சு குடுத்தா என்ன?”