பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சா.கந்தசாமி

ன்றைய மயிலாடுதுறை மண்பெருமை கொள்வது போல ‘சாயாவனம்’ என்ற நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு இடத்தை கைப்பற்றிக் கொண்டவர், சா. கந்தசாமி.

இலக்கிய சங்கம் தோற்றுவித்த இளைஞர்களில் சிலர்தான் திட்டமிட்டு மெளனியின் உத்தியைப் பின்பற்ற முனைந்தார்கள். அன்றுவரை சிறுகதை எழுத்தாளர்களிடையே அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத மெளனி இவர்களுக்கு வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு முக்கிய அம்சமாகும். சா. கந்தசாமி, ந. முத்துசாமி ஆகியோர் இந்த வழியில் வந்தவர்கள். முக்கியமாக சா. கந்தசாமி எழுதிய ‘சாயாவனம் என்ற நாவல் இலக்கிய ரசிகர்களின் கவனத்தைப் பெற்றபின் இவருடைய சிறுகதைகளும் விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றன. சிலவற்றில் வடிவ உணர்வு ஓரளவு தெளிவாகத் தெரிந்தாலும் வித்தியாசமான கருப்பொருள்களை, பாலுணர்வு, மனோவிகாரம் போன்ற அம்சங்களைச் சற்று வெளிப்படையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சோதனை முயற்சி அதிகமாகப் புலப்படுகிறது...’ என்று சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

‘சா. கந்தசாமியின் கதைகளும், நாவல்களும் அற்புதமாக அமைந்துவிட்டன என்று காணும்போது தமிழர்கள் எத்தனைதான் குப்பைப் பத்திரிக்கைகளுக்கு அடிமைப்பட்டிருந்தாலும் இலக்கிய ரீதியாக அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லவேண்டி இருக்கிறது’ என்றார், க.நா.ச.

‘ஆறுமுகசாமியின் ஆடுகள்’ என்ற கதை இப்படித் தொடங்குகிறது. “ஆறுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவி பிடித்து வளைத்து ஒரு சின்ன கிளையை முறித்தான்...” அவர் அனுபவம் தெறிக்கிற கதைகள் அமைவதை அவரே, “பூம்புகார் என் தாயார் வீடு. அந்தக் காலங்களில் சீர்காழி பூம்புகார் போன்ற இடங்களைச் சுற்றியிருக்கிறேன். எங்கம்மா கூட பூம்புகாருக்கு காவேரிக்கரையோரமா நடந்தே போகிற பழக்கம் உண்டு. அங்கு கண்ட இளமைக்கால நினைவுகள். தான் என் கதைகளில் வருகிறது.” இப்படியாப்பட்ட சா. கந்தசாமி இன்று அம்மண்ணில் நிலவும் சமூகத்தை பிரதிபலிக்க முடியாது போனது... இவருக்கும் இலக்கியத்திற்கும் இழப்பே...