தஞ்சைச் சிறுகதைகள்
223
வைத்துக்கொண்டார்.
ஐந்தாறு ஆடுகள் குறுக்காகச் சாலையைத் தாண்டச் சென்றன. சப்-இன்ஸ்பெக்டர் வாயில் இருந்து சிகரெட்டை கையில் எடுத்துக்கொண்டு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.
எதிர்ப்பக்கத்தில் இருந்து ஒரு லாரி வேகமாக வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் டிரைவர் வேகத்தைக் குறைத்தான். கிளினர் அவசர அவசரமாகக் கிழே குதித்து முன்னே ஓடிவந்து, “வெறும் வண்டி சார். ஒண்ணும் இல்ல சார்-” என்றான்.
“எங்க போவுது”
“மொகதீன் பாய் மெட்ராஸூக்கு ஆடு புடிச்சித் தர்றேன்னார் சார். அதுக்குத்தான் போகுது சார்”
“பணம் எல்லாம் கொடுத்தாச்சா”
“இல்ல சார்...இன்னமதான் சார்”
“ஒத்த பனமரத்துக்கிட்டே மேயுது பாரு... அதுல பத்து ஆட்டைப் புடிச்சிகிட்டு ஐயாயிரம் கொடு”
“நம்ப ஆடா சார்”
“அடி செருப்பால்” ராஜேந்திரன் அவசரஅவசரமாக மோட்டார் கைக்கிளில் இருந்து கீழே இறங்கினான்.
“ஏண்டா... ஊரான் வீட்டு ஆட எல்லாம் புடிச்சி விக்கற பொறுக்கின்னு என்ன நெனைச்சிக்கிட்டீயா?
டிரைவர் சக்ரபாணி லாரியில் இருந்து இறங்கி வந்தான்.
“பாரு... இவன் நம்பள நக்கல் பண்ணுறான்”
“புது பையன் சார். உங்கள பத்தி தெரியாது சார். என்னா சார். நீங்க சொல்லுங்க சார்”
“கூந்தல் பனை கிட்ட மேயறது எல்லாம் நம்ம ஆடு... உத்தியோகத்துல இருக்கறதால நம்ப பேர்ல வேணாமென்னு மச்சினன் பேர்ல வாங்கிவிட்டு இருக்கேன். அதுல ஒரு பத்து ஆட்ட புடிச்சிக்கிட்டு பணம் கொடுடான்னா உங்க ஆடான்னு கேட்கறான். இவன செருப்பாலே அடிச்சி பல்ல உடைக்க வேணாம்”
“மொகைதீன் பாய் கிட்ட பேசி இருக்கு சார்”
“என்னய்யா மொகைதீன்... பெரிய... இது... அவன் கிட்டதான் ஆடு வாங்குவீங்களா சரி. போங்க... நீங்க போங்க...”
“அது இல்ல சார். அப்டியெல்லாம் ஒண்னும் இல்ல சார்”
“வேணாம். வேணாம். நீ போய் மொகைதீன் பாய்கிட்டேயே வாங்கிக்கிட்டுப் போ—”
“கோவிச்சிக் கொள்ளாதீங்க சார். இப்ப ஒரு பத்து ஆடு தான் சார் வேணும். டேய்... சுப்பு. நீ போய் ஆட்ட இப்படி