பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

303


பவுனாக்கிட்டு எப்பவரும், டான்சுக்காரி எப்ப வருவா அப்டின்னுதாள் பாத்துகிட்டு குந்திகிட்டிருக்கும் சனம் அம்புட்டும்.

பவுனாக்கிட்டும் டான்சுக்காரியும் மேடையில வந்து குதிக்க ஆரம்பிச்சா சனங்களுக்கு சிரிச்சிசிரிச்சி வயுரெல்லாம் புண்ணாயிப்போயிரும். அவுங்க கும்மாளம் போடுறதும், சீட்டி அடிக்கிறதும் அதுவே ஒரு நாடாவம்தான். நாடாவம் நடத்துரதுக்கு முன்னாடி பொம்பளை குட்டிங்க அரிதாரம் பூசி ஓடை மாத்திக்கிட்டிருக்கப்ப உள்ளூரு பசங்களும், வெளியூசு பசங்களும் மறப்புல வச்சிருக்க கீத்த நீக்கி நீக்கிகிட்டு வேடிக்க பாக்க கௌம் பிருவானுவ. என்னமோ அங்கயே அவ அவுத்துப் போட்டுப்புட்டு ஆடுற மாதிரி, நடிக்க வந்தவன் அவனுவள வெரட்டி வெரட்டி அப்பயே தொண்ட பாதிப் புண்ணாப் போயிரும். அப்புடி என்னா ருசியத்தான் பொம்ளகிட்ட கண்டானுவளோ? ராஜபார்ட்டு வந்து. மேடையில் நடிக்கிறப்ப நாடாவம் பாக்க வந்தவனுவல்ல பாதி பயலுவ போயிருவான், நடிக்கிறத பாக்க வந்தவனுளா அவனுவ... நய்யாண்டிய ரசிக்க வந்தவனுவளாச்சே.... அங்கன புதுசா மொளச்சக் கடையில டீ குடிக்க போயிருவானுவ. பொட்ணம் திங்கப் போயிருவானுவ. புரோட்டா சாப்டப் போயிருவானுவ. காவாசிப்பேரு சூதாட்டம் ஆட கௌம்பிப் போயிருவான். வய வாய்க்காலுல கண்டு ரசிச்சு பேசிப்பழகுன குட்டிங்க ஆராச்சும் நாடாவம் பாக்க வந்துருந்தாளுவன்னா அவள மை போட்டு இழுத்துக்கிட்டு போயிருவானுவு... எங்கங்குறீங்க.... கணக்கு பண்ணத்தான். இதெல்லாம் முடியாதப் பயலுவ கொறட்டையடிச்சிக்கிட்டு தூக்கம் போட்டுகிட்டு கெடப்பான். வேட்டி அவுந்தது தெரியாமக் கூட பல்லு வுளுத்தவனும் பாக்கியடிக்கிற பயலுவளும் தான் ஆன்னு பொளந்த வாயி பொளந்தபடி ராஜாவ ரசிச்சிக்கிட்டிருப்பான். இப்புடி வந்த சனம் அம்புட்டும் மெயின் நடிப்ப பாக்காம போயிருதேன்னு கவலப்பட்டுதான் நாடாவக்காரன் தந்தரம் பண்ணுனான். மெயினாக்கிட்டு ஆக்கிட்டு பண்ணிகிட்டிரக்கப்பயே சைடையும் வுட்றுவான். சில்ற ஆக்கிட்டு வந்து தையா தக்கான்னு குதிச்சி ரெட்ட அர்த்தத்துல வசனம் பேசுனாதான் நம்ம ஆளுவ குந்தி நாடாவம் பாக்குறான்... அரிச்சந்திர நாடாவம் அரிச்சந்திரா நய்யாண்டி நாடாவமா ஆயிப்போயிரும். தங்கசாமி ராஜபார்ட் கட்டிகிட்டு முக்கி முக்கி மூணு மூணரை கட்டைக்கு எவ்வுறப்ப மூக்குல, சளியே வந்துரும். அனாயசமா நாலு கட்டக்கி கூட பாடுனவருதான். ரொம்ப காலத்துக்கு முந்தியே அது முடியாமப் போச்சி. அந்தக் காலத்துல வடக்குத்தி ஆளுவ தமிழ உச்சரிக்கத் தெரியாத காலத்துல நாடாவ மேடையில ஏறி ராசாவேசம் கட்டிக்கிட்டு இப்புடித்தான் சொல்ல வுட்டுபுட்டு பாடுவானுவளாம்... சும்மானாச்சுக்கும் ஒன்னே ஒன்னு பாருங்க...