பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

329


“ரங்கு இந்த சாமாவையரை இரண்டாந்தாரமா கட்டிண்டு பதினைந்து வருஷமாச்சுடா. இப்படியொரு சுகத்தை, இப்படியொரு திருப்தியை, இப்படியொரு அற்புதத்தை இப்ப தாண்டா அனுபவிக்கிறேன்.”

பஞ்சுமாதிரி அந்த உடம்பை இப்படியும், அப்படியுமாய் சூறைக் காற்றாய்ப் புரட்டி புரட்டி முகம் கைகள், கால்கள் என்ற பேதாபேதங்களின்றி.... பேதங்களை மறந்த இவனின் புயல் தனம் அவளுக்கு வேண்டியிருந்தது.

எழுதத் தெரியாத சின்னக்குழந்தையாய்ப் பாவித்துக் கொண்டு ஸ்லேட்டில் மனம் போன போக்கில் குறுக்கும் நெடுக்கிலுமான கோடுகள் தரும் சுகம் அவளுக்கு வேண்டியிருந்தது.

இதழ்களைப் பிச்சுப் பிச்சுப் போட்டு முகரும் மூர்க்கம் மட்டுமல்ல... சில வேளைகளில் ‘கல்யாணி அவசரமா வெளியூர் போறேன்’ என்றவாறே கன்னத்தை லேசாய் நிமிண்டி விட்டுப் போகும் அந்த மென்மை - அந்த லயம் கூட அவனுக்குப் பிடித்திருந்தது.

கல்யாணி மட்டுமல்ல, ஜெயா, சரோஜா, கோமளவல்லி உள்ளூர் எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்திச்சி ராஜம்மா வயலட் என்று ஒரு நீளமான பட்டியலே - இவனைத் தன்னுள். - தங்கள் கனவிலாவது. பிரவேசிக்க வைத்து விட வேண்டுமென்று காத்திருந்தனர். அதனால்தான் ஆண்கள் பயந்தார்கள். சீட்டு தம் வீட்டிலும் விழுந்துவிடுமோ என்ற பரபரப்பில் அவனை அவசர அவசரமாக, பிள்ளையார் கோயில் மேடைக்குத் தள்ளிக்கொண்டு வந்து நியாயம் பேசி... இந்தக் கைதானே, இந்தக் காலதானே; இந்தக் கண் தானே, இந்த உடம்புதானே... என்று அடியடியென்று அடித்துப் பிய்த்துப்போட்டார்கள்.

அன்றைக்கு மறுநாள் இவன் கல்யாணியோடு ஓடிப்போனான். உலகம் தன் வீட்டு கொல்லைப்புறமளவிற்கும் சின்னதாகத் தோன்றியது. கொஞ்ச நாட்கள் தாம், சாமாவையரைப் போல இவனையும் உணர்ந்தவளே போல இன்னொரு ரங்குவைச் சினேகித்துக் கொண்டு ஒரு ராத்திரி வேளையில ஓடிப்போனாள் அவள்.

‘யாரு... ரங்கஸ்வாமியாடா. அது, 'இப்பத்தான் வரியா? என்று வில் வண்டியிலிருந்து ஒரு குடுமித் தலை எட்டிப் பார்த்தது. “எலே என்னடாலே இப்படியாயிட்டே, இளைச்சுப்போய்.. கறுத்து...தலையெல்லாம் வெளுத்துப்போய் என்ன டா ...

கண்முழி இருக்கற எடத் தெரியலே. உனக்கு சேதி தெரியுமோ... சாமாவையன் செத்துப் போயிட்டான். தலைத்திவசம் கூட ஆயிட்டுது.