பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உஞ்சைராசன்


துக்கூர் மண்ணில் பிறப்பெடுத்தவர். தமிழில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் வளர்ச்சி திசை நோக்கி சென்று கொண்டிருக்கிற இப்போதைய நிலையில், உஞ்சைராசன் பங்களிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டு.

இவரது சிறுகதைகள் அவர் பிறந்த மண்ணையும், மக்களையும் களமாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்தப் படைப்புகள்-ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனையை முன் நிறுத்தி போராட வேண்டியதை முன்மொழிகின்றன.

‘... போராடும் ஒரு சமுதாயத்தில் அவனுடைய மொழிதான் சிறப்பான அடையாளத்தைக் காட்டும். இவரது கதைமொழி தலித்தினுடைய சிறுகதைத் தொகுதியில் கட்டியம் கூறும் இன்குலாப்பின் சொல்லாடல் மிகையானதே உஞ்சைராசனின் கதையை வாசப்பில். மரபுவழிப்பட்ட மொழியைத்தான் புணைந்துள்ளார் என்பதை நன்கு உணரமுடிகிறது.

இத்தொகுப்பில் உள்ள கதைகளில் தலித்துக்களின் அடிமனதைத் தொட்டு காட்டும் - மொழியில் வீச்சம் இல்லாவிட்டாலும் படைப்பாளி அந்தத் திசையை நோக்கிய எடுத்து வைத்துள்ள அடியை மறுக்க இயலாது.

‘இந்தியா டுடே’ நூல் விமர்சபகுதியில் ராஜ்கௌதமன், ஆசிரியரின் இயக்கப் பணியின் அனுபவத்தால் இக்கதைகள் வரையறுக்கப்பட்ட ஒற்றைப் பரிமாணம் பெற்றுள்ளது... கட்சி இயக்கம் என்ற தளத்தில் கதைகளை வரிசைப்படுத்துகிறபோது பிறப்பு முதற்கொண்டே தீண்டாமையால் தண்டிக்கப்படும் தலித்துக்களில் மனோநிலையில் உருவாகின்ற பகடித்தனமான எதிர்ப்புக் குணமும் நடவடிக்கைகளும் கவனிக்கப்படாமல் போகின்றன. தலித்துக்களைவிட தலித்துக்களைப் பற்றி எழுதுகிற

இயக்கவாதிகள் மிகவும் ஒழுக்கவியலாளராக ஆகிவிடுவது ஆபத்தான போக்காகும்’ என்று எகிறு தொகுதிக்கு எழுதியிருக்கும் குறிப்பு கவனத்துக்குள்ளாகிறது.