பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

சோலை சுந்தரபெருமாள்


“சரி, இந்தா ஓம் பொல்லாப்பு வேண்டாம். பத்து ரூவா கூடவே வச்சுக்க. நல்லா எரிச்சுப் புடனும். அவரு மருமகன் பொல்லாத ஆளுடா. அப்புறம் அடிச்சிப்புட்டாரு வைச்சிப்புட்டாருன்னு சொல்லிக்கிட்டு வரப்புடாது ஆமா.” பணங்கொடுத்த வடக்கு வீட்டுக்காரர் எச்சரித்தார்.

நிலா உயர்ந்து விட்டது. மாரியண்ணே வீட்டு பொட்டை நாய் ஊளையிட்டது. கரும்புக் கொல்லையில் கிடக்கும் காட்டுப் போக்கான் கத்தும் சத்தம் கேட்டது. வள்ளி மக அறை வீட்டுக்குள்ளே அழுவுறது அக்கம் பக்கத்தாரின் தூக்கத்தைக் கெடுத்தது. மினுக்கட்டான் பூச்சியாட்டம் தெருவிளக்கு கீழே நாலைந்து பையன்கள் படக்கதை பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

கருவாட்டுக் கொழம்பு. முழிச்சிருந்து பேத்தி சோறு போட்டாள்.

காலையில் செட்டியார் கடையில் நாலைந்து இட்லியெப் புட்டுப் போட்டது. பகல் முழுக்க வெறும் வயித்திலேயே தண்ணியெக் குடிச்சது சரியாகவே இல்லை. இப்ப வேறு குடித்திருந்தார். எனினும் ஒரு குண்டாச் சோறு உள்ளே போனதும் போதை ஏறி இறங்கியது. மடிச்சிலைப் பையை அவிழ்த்து வெத்திலை போட்டுக் கொண்டார். தடியை எடுத்துக்கொண்டு பொன்னுச்சாமி. வீட்டுக்குப் போனார் செவந்தான்.

“பொன்னுசாமி... ஏ... பொன்னுசாமி... அடஙொங்காள ஒலியாண்டா... கள்ளென்ங்க காலையிலே கட்டி வச்சி அடிக்க வாடா... காசெ வாங்கி தண்ணியெக் குடிச்சுப்புட்டு தூங்குறெ... ஏலெய்... எந்திரிடா- ஏய் வனிதா-அடியேய்-வனிதா-” செவந்தான் சத்தமிட்டார்.

“என்னப்புச்சி- இப்பத்தானே படுத்தாக தண்ணியெ வாங்கி குடுத்திட்டியா” வெளியில் வந்த வனிதா சொன்னாள்.

“ஆமா... ஓம் புருஷனுக்கு வாங்கிக் குடுத்தாக... இதையுங் கண்டமான்னு குடிக்கிறாண்டி... சரி சரி - கெளப்பிவிடு சுடுகாட்டுக்குப் போகணும்.

“சுடுகாட்டுக்கா... என்னப்புச்சி நீ. வெல்லனா வேலைக்கிப் போவணும் அப்புச்சி.”

“போகலாமுடி... யாத்தா இன்னேரம் எரிஞ்சிரிக்கும் ஒப்புக்குப் போய் பாத்தெட்டு வர்றதுக்தானே... இந்தா... கரிச்சாங் கத்தறத்துக்குள்ளே வந்திடுவோம்.... எழுப்பு விடுத்தா... இனி ரெங்கசாமியெ வேறெ கௌப்பனும்”

வனிதா - உள்ளே சென்று எழுப்பினாள்.

தென்னங்காற்ற நன்கு வீசியது. தலைப்பக்கம் நெருப்பு பிடிக்கவேயில்லை. சுற்றிவர விராட்டி எரிந்து. கட்டையில்