பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

சோலை சுந்தரபெருமாள்


பழைய நினைவுகளில் சுழன்று போதையேறிய செவந்தானுக்கு இப்படி பிணம் சரிந்து விழுவதும் தூக்கி வைத்து எரிப்பதும் புதிதல்ல இருக்கிறதெக் கொண்டு எரிக்கணும். சட்டுனு சொல்லு நாறுது என்று கேட்டான்.

போதை ஏற ஏற- கள்ளுக்கடையும் தன் சம்மந்தி அடிவாங்கி அவமானப்பட்டது... ஏன்ய்யா ... இப்புடி மானங்கெட்டு பொளைக்கிறியன்னு மச்சான் திட்டியதுமே நினைவை அரித்தது.

மரத்தைக் குடுத்து தூக்கி வைச்சி எரிச்சுப்புடுவோம்ன்னு ரெங்கசாமி கேட்டான். செவத்தான் எழுந்தார். தலையில் உருமாலை சுற்றினார். “தூக்கி வச்சியா எரிக்கணும். எங்கடா கோடாலின்னு போய் கோடலியை எடுத்தார்.

சரிந்து கிடந்தார் மீசைக்காரர். ஓங்கி காலை வெட்டினார். இந்தக் காலுதானே எம்மச்சானெ ஒதைச்சது... ஓங்கி கையை வெட்டினார் இந்தக் கைதானே என் கன்னத்திலே அறைஞ்சது. பழைய நினைவும் இப்போது குடித்த சாராயமும் செவந்தானுக்குள் அடங்கிக் கிடந்த மூர்க்கத்தனத்தை உசுப்பி விட்டன. வெட்டி வெட்டி எடுத்து நெருப்பின் மேல் போட்டார். எரிந்தும் எரியாமலும் கிடந்த முண்டத்தை தாறுமாறாகக் கொத்த அள்ளி நெருப்பில் போட்டார். பாடைக் கம்புகளையும் பிய்த்து எடுத்து நெருப்பிலேற்றி மீந்து கிடந்த சீனியையும், சீயக்காயையும் அள்ளிக் கொட்டினார். மீசைக்காரர் எரிந்த விறகுகளுடன் கருகிக் கொண்டிருந்தார். தணல் உயர்ந்து படபடத்து எரிந்தது. செவந்தானுக்கு ஆத்திரம் தணிந்தது. இந்த ஆத்திரமும், கோவமும் எப்படி வந்ததென்றே தெரியவில்லையே என்று தன்னையே வியந்து நின்றார் செவந்தான்.