பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யூமா வாஸுகி


ஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மண்ணுக்குச் சொந்தக்காரர் ஓவியர் மாரிமுத்து.

மாரிமுத்து என்ற பெயரில் ஓவியங்கள் வரைந்து வந்த ஒருவரே யூமாவாஸுகி என்ற பெயரில் கவிதைகளும், கதைகளும் எழுதுகிறார். இவரது கவிதைகள், ஓவியங்கள், சிறுகதைகள் எல்லாமே சோகத்தை அடிநாத இழையாகவும் அதை வெளிப்படுத்தும் மொழியாக அறுவெறுப்பு மிக்க கோரப்படம் பிடித்தலையும் கொண்டிருக்கின்றன.

...நல்ல கோடுகளை உருவாக்க வல்ல ஒரு ஓவியன் சோகத்தையே தனது மொழியாகக் கொண்டிருக்கிறான். சொற்படிமங்களை வெளிப்படுத்தும் தன்மையுடைய இவர் படிமங்கள் அறுவெறுப்புரும் கோரங்களாக வெளிப்படுகின்றன. இவற்றை இவர் நியாயப்படுத்தவும் செய்கிறார். இதன் மூலம் எவ்வித இலக்கும் அற்ற லும்பன் பண்பாட்டு தன்மையுடையவராக இருக்கிறார். நமது சூழலின் பண்பாட்டு தன்மையுடையவராக இருக்கிறார். நமது சூழலின் சோகம். இங்குள்ள பண்பாட்டு நிகழ்வுகள் குறித்த அக்கறையோடு தேடும் சொரணையற்று வெறும் அற்ப நிகழ்வுகளில் தன்னை இனம் காணும் இவரின் லும்பன் வாழ்வை விமரிசனம் செய்யும் அதே வேளையில் இந்த லும்பன்களிடம் உள்ள திறமைகள் குறித்தும் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை . இப்படிப்பட்டவர்களின் 'நான்' களின் பிரக்ஞை பூர்வமாக உருக் கொள்வதில் சமூகத்தின் பங்கு பற்றி நாம் தீர விசாரித்துக் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்... இந்த மாரிமுத்துவைப் பற்றி கவிதாசரணில் வீ. அரசு குறிப்பிட்டுள்ளார்.

"...யூமாவாஸுகியின் சொல்லோவியங்கள் வெறியும், அமைதியும் கொண்டவை. குரூரம் அன்பும் பாராட்டுபவை. பல சமயங்களில் அவர் அறிமுகப்படுத்திக்காட்டும் அவர் வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத வகையில் நியாயத்தையும், நேர்மையையும் வலியுறுத்துபவை. ஒரு வேளை மீட்சிக்கான வேட்கைகளாக இருக்குமோ? இருந்தால் நல்லது. இந்த வேட்கை இன்னும் தேவையானது...” இலக்கு இதழில் தன் அபிப்பிராயத்தை வைக்கிறார், இன்குலாப்.

இவர் அதிகமாக எழுதாவிட்டாலும் சிறுகதை: - வெளிப்பாட்டின் கூர்மையும், தெளிவும் பொதிந்திருப்பது அவரது படைப்புகளின் தனிச்சிறப்பு.