பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

சோலை சுந்தரபெருமாள்


ஒரு குருவியின் அலகு. தன் சிறகு வீச்சில் சப்தத்தில் மீது அமைதியைச் சரித்து மூடி குருவி பறக்கத் தொடங்கியது இப்போது குழந்தையில்லை. அழுகுரல் இல்லை. நிலமும், வெயிலும் அவனுமில்லை. தூரத்தில் புள்ளியாகி மறைந்து கொண்டிருந்தது குருவி.

இரண்டு தினங்கள் வேறெதையும் நினைக்க விடாமல் பதிந்து விடாமல் வலுவான நகக்குறியாய்ப் பதிந்து ஹிம்ஸித்தது கனவு. அறைத் தனிமை அவனை நெருங்கவிடாமல் துரத்த ஊர் வெளிப்புறங்களில் சுற்றிக் கொண்டிருந்தான். கனவின் வர்ணனையும் அதன் கீழே சில விளக்கச் சித்திரங்களும் குறிப்புத் புத்தகத்தின் சில பக்கங்களை நிரப்பின.

கூட்டத்தில் கலந்து குனிந்து பார்த்தான். ஒருக்களித்த விகாரச் சயனமாயிருந்தது. வலதுகை தலைக்குமேல் உயர்ந்து அசாதாரண வளைவுடன் புழுதியில் பதிந்திருந்தது. வாயிலிருந்து தரையை இணைத்த ஒழுக்கு நின்று போய் வாய் கோடியிலும், கன்னத்திலும் உறைந்திருந்தது ரத்தம். இனங்காணும் வாய்ப்புகளைத் துறந்து சக்கரவேகத்தில் பிசையப்பட்டிருந்தது. முகம். தலையென்று அவதானிக்கக் கூடிய பாகத்தின் ரோமப்பிளவின் கீழிருந்து நாவின் நுனி போல மூளை எட்டிப் பார்த்திருந்தது. ஒரு கால் மடிந்தும், இன்னொன்று திக்குகள் காட்டும் விரைத்த விரல்களுடனும் நீண்டிருந்தது. ஆழச் சிராய்ப்பில் தசையுரிந்து முழங்கை எலும் வெளித் தெரிந்தது. தார்ச்சாலையில் - விளிம்புகளில் ஈக்களுடன், ஒரு அபகரித்தலின் தீவிரத்தை விளக்க முற்படும் - ரத்தப்பெருக்கில் ஊறிக்கிடந்தது பிணம். மேலும் நிற்க முடியாமல் கூட்டத்திலிருந்து விலகி நடந்தான்.

சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டு வந்ததை இப்போதுதான் அறைச் சூழல் உணர்த்துகிறது. மறுபடியும் அவ்வளவு தூரம் சென்று சைக்கிளைத் தேடுவதற்கு இசைவற்றிருந்தது உடற்களைப்பு. அகாலத்திலும் விட்டு வந்த இடத்திலேயே சைக்கிள் நின்று கொண்டிருப்பதால் யோசிப்பதற்கு ஒரு முகாந்திரமுமில்லை. அது பூட்டப்படாதிருந்தது.

தீய்ந்த முனைகளுடனான சிகரெட் துண்டுகளும், கிழிபட்ட காகிதத் துணுக்குகளும், வண்ணங்கள் காய்ந்த தூரிகைகளும் விரவி அறையை வயப்படுத்தியிருந்தன... புழுதியின் மீதும் பழைய காலண்டர் தாளின் மீதும் படுக்கை விரித்திருந்தான்: படுக்கையெனில் அழுக்குப் பிடித்த போர்வையொன்று தரையில் சுருண்டு கிடப்பது. உத்தரக்கட்டைகளின் ஏதோ ஒரு இடுக்கில் எலி செத்துக் கிடக்கும். துர்நாற்றம் அழுத்தமாக பரவியிருந்தது. சிகரெட் -துர்நாற்றம் அழுத்தமாகப் பரவியிருந்தது. சிகரெட்-கொசுவர்த்திச் சுருள் புகை மூட்டத்தினூடேயும்