பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சோலை சுந்தரபெருமாள்


“சும்மா போங்கள், சுவாமி” என்றாள் அந்தப் பெண்.

அக்கினி திராவகத்தைப் போல கொதிக்கும் மணல் பரந்த பாலைவனத்தில் நீர்ச்சுனையைப் பிரயாணி கண்டால், அவன் மனம் எவ்வாறு இருக்கும்? அதைப்போல நாராயணன் மனது துள்ளிக் குதித்தது.

நாராயணன் (அவன் பள்ளி வாத்தியாராக நியமிக்கப்பட்ட சிறிது காலத்திற்கு முன்னரிலிருந்து தன்னை நாராயண சர்மா என்று அழைத்துக்கொண்டான்.) பள்ளியை அடைந்தான். வந்த ஆள் பள்ளியின் கதவைத் திறந்தான். பள்ளியாவதற்கு முன் அது குடியிருப்பு வீடாக இருந்தது. வீடு, திண்ணை எங்கே பார்த்தாலும் புழுதிமயமாக இருந்தது.

“நான் போய் வருகிறேன்” என்றான் கூடவந்த ஆள். அவனும் போய்விட்டான்.

“இவ்வளவு புழுதியில் எப்படி பள்ளியைத் துவக்குகிறது” என்று எண்ணி, துடைப்பத்திற்காக, வீடு முழுவதும் தேடி அலைந்தான். உத்தரக் கட்டையில் ஒடிந்த விளக்குமாறு ஒன்றைக் கண்டான். அதைச் சீர்படுத்தி, பெருக்க ஆரம்பித்தான். இதற்குள் தத்தம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, தகப்பன்மார்கள் பலர் அங்கே வந்தார்கள். நிர்வாகிப் பெரியவரும் அங்கே வந்து சேர்ந்தார்.

“என்ன வாத்தியாரே! உமக்குச் சமயம், பொழுது தெரியவில்லையே! கூட்டுகிற வேலையை நாளைக் வைத்துக்கொள்ளக் கூடாதா? அதற்கு லக்கினம் தவறிப் போய்விடவில்லையே! குப்பை கிடந்தால் படிப்பு வராதா” என்று பெரியவர் பிரசங்கம் செய்தார்.

நாராயண சர்மா துடைப்பத்தைச் சிறிது தூரத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு, கைக்கூட துடைத்துக் கொள்ளாமல் வந்து சேர்ந்தான்.

“என்ன அய்யா! கையிலே முழ நீளக் குப்பையை வைத்துக்கொண்டு, கையைச் சுத்தம் செய்து கொள்ளாமல் சொல்லிக் கொடுக்க வந்து விட்டீரே” என்றார் பெரியவர். கைகளைத் தனது உடையின் பின்புறத்தில் துடைத்துக் கொண்டான் நாராயண சர்மா. தரித்திரத்திற்கும் அடிமைத்தனத்துக்கும் எவ்வளவு நெருங்கிய சம்பந்தம் உண்டு என்று அவனுக்கு அப்பொழுது தெரிய வந்தது. குரங்காட்டி, குரங்கை “லங்காபட்டினம் தாண்டராயா” எனக்கேட்டு, அதைத் தாண்டச் செய்யும் வீதி வினோதம் அவனுக்கு ஞாபகம் வந்தது. லக்கினம் தவறிவிடாமல், அன்றைக்கு ஒருவாறு பாடம் முடிந்துவிட்டது. பெற்றோர்களும் பையன்களும் கலைந்து போனார்கள்.

“அவஸ்தப்படாதேயும், உமக்கு அரிசி அனுப்புகிறோம்