பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

431 சரபோஜி | காசித் திருமடத்தில் தங்கியமை இரண்டாம் சரபோஜி 10-7-1821 பகல் 8 மணிக்குக் காசியை அடைந்தார். "ஆஷாட சுத்த தசமி"அ செவ்வாய்க்கிழமை ஜுலை மாதம் 10ஆம் நாள் " காசியை அடைந்ததாகவும், காசியில் காசித்தம்பிரானுடைய மடத்தில் இறங்கியதாகவும், வந்தநாள் " கூேடித்திர உபவாசமும் தீர்த்தவிதி"யும் செய்த தாகவும், மறுநாள் மணிகர்ணிகையில் நீராடுதலும் " தீர்த்த சிரார்த்தமும" செய்ததாகவும், மழைக்காலமாக இருப்பதால் சில காலம் தங்குவதாகக் கருதுவ தாகவும், விஜயதசமி வரையில் தங்க நினைப்பதாகவும் 12-7-1821இல் எழுதச் செய்துள்ளார்." 11-9-1821இல் காசியினின்று எழுதிய குறிப்பில்', நம்முடையவும் நம்முடன் கூட இருப்பவர் சந்தோஷத்துக்காகவும் பாத்ரபத பஹாள திவிதியை"சு வியாழன் செப்டம்பர் 13 வரையில் இங்குத் தங்கி 14ஆம் நாள் பிரயாகைக்குப் போய் அந்த யாத்திரை முடித்துக்கொண்டு." என்றிருப்பதால் 13-9-1821 முடியக் காசியில் மன்னர் தங்கியிருந்தார் என்பது பெறப்படும். ஆனால் அதற்கு அப்பாலும் மன்னர் காசியில் தங்கியிருந்தார் என்பதும், அதற்குரிய காரணமும் 4-10-1821இல் காசியினின்று எழுதச் செய்த கடிதச் சான்றினால் தெரிகிறது : ' செப்டம்பர் மாதம் 13ஆம் தேதிக்குப் பிரயாகை யாத்திரை புறப்படு கிறோம் என்று எழுதியிருந்தோம். அதன்படியே ஸ்வாரியும் தயாராயிற்று. ஆனால் அதற்குமுன் நன்றாக நின்றிருந்த மழை கிழக்குத் திசையினின்று அடிக்கும் காற்றுடன் பெய்யத் தொடங்கியதால் பாத்ரபத பஹாள் அமாவாசைக்குப் பிறகு ஆஸ்விஜ சுக்ல பாட்டிமை"அ முதல் எப்பொழுதாவது மழை இம்மாதிரி இருக்கிறது. இதனால் மேற்படி மாதம் (அக்டோபர்) 26ஆம் நாள் புறப்படுவதாக இருக்கிறோம் " - என்பதனால் 26-10-1821இல் காசியிலிருந்து புறப்பட நினைத்தார் என்பது பெறப்படும். 19-10-1821இல் எழுதிய கடிதத்தில் ஆஸ்வீஜ கிருஷ்ண பகடி பஞ்சமி திங்கட்கிழமை காலை 4 மணிக்குப் புறப்பட்டுப் பிரயாகைக்குப் போகிறோம் " என்றும்" 31-10-1821 கடிதத்தில்," " 23ஆம் தேதி பிரயாகைக்கு வந்து அங்குள்ள தீர்த்த விதிகளை ஒழுங்காகச் செய்தாயிற்று ' என்றும் எழுதியுள்ள வற்றான் 23-10-1821இல் பிரயாகையை அடைந்தார் மன்னர் என்பது பெறப்படும். 32.அ. 'ஆனி மாதம் வளர்பிறை 10ஆம் நாள். 33. 5-125 முதல் 127வரை. 34. 5-72, 78 34.அ. ஆவணி தேய்பிறை இரண்டாம் நாள் 35. 5-117 முதல் 120 வரை 35.அ. பாட்டிமை-பிரதமை-முதல் சிதி 36. 5-120 37. 5-121