பக்கம்:தந்தையும் மகளும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தந்தையும்

அம்மா! நீ கேட்பது சரிதான். புயல் காற்று வீசுவதால் பெரிய கப்பல் சேதமடையும் பொழுது சிறிய தாணியில் ஏறித் தப்ப முடியுமா? புயல் காற்று வீசும் போது அலைகள் மலைபோல் கிளம்புமே, அப்போது தோணியில் தண்ணீர் நிறைந்த தோணியை மூழ்கும்படி செய்துவிடாதா என்று கேட்பாய்.

ஆம் அம்மா! தண்ணீர் நிறைந்தால் தோணி மூழ்கி விடவே செய்யும். ஆனால் தோணியின் அடிப்பாகத்தில் ஒரு சிறு கதவு இருக்கும். அலை நீர் தோணியில் ஓரளவு ஆனதும் அந்தக் கதவு திறக்கும். நீர் வெளியே போய் விடும். ஆனால் அடியிலுள்ள கடல் நீர் அதன் வழியாகத் தோணிக்குள் ஏற முடியாது. ஏற முயலும் போது கதவு இறுக்கமாக மூடிக் கொள்ளும். இந்தக் காரணத்தால்தான் தோணி சிறியதாயிருந்தாலும் ஜனங்கள் அதன் உதவியைக் கொண்டு உயிர் தப்ப முடிகிறது. அதனால் அந்தத் தோணியை '"உயிர் தப்பிக்கும்தோணி" என்று கூறுவார்கள்.

99 அப்பா! நன்றாகச் சுவாசத்தை உள்ளே இழுத்துக் கொண்டால் எளிதாக மிதக்க முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! ஒரு வஸ்துவை தண்ணீரில் போட்டால் அதன் நிறை அதன் அளவுள்ள நீரின் நிறையை விடக்குறைவாக இருக்குமானால் அந்த வஸ்து தண்ணீரில் மிதக்கும். நம்முடைய உடம்பின் நிறை அதன் அளவுள்ள நீரின் நிறையை விடக் கொஞ்சம் கூடியதாக இருப்பதால் தான் நம்முடைய உடம்பு ஜலத்தில் மிதக்க முடிவதில்லை

ஆனால் நாம் நன்றாக சுவாசத்தை உள்ளே இழுத்தால் அப்போது உடம்பின் அளவு கூடுகிறது. ஆயினும் அப்படிக்கூடிய அளவு உள்ளே சென்ற காற்றின் அளவேயாகும்,