பக்கம்:தந்தையும் மகளும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

121

உலரும்படிச் செய்கிறது. அப்படி அது உலரும் பொழுது ஆளிவிதைத் தைலம் காற்றிலுள்ள பிராணவாயுடன் கலந்து கட்டியான கோந்து போல் ஆகிவிடுகிறது. சாயத்தை அரைத்துக் கொஞ்ச நேரம் வைத்துவிட்டால் அதன்மீது இந்த மாதிரியான ஒரு படலம் படர்ந்து விடுவதைக் காணலாம்.

இந்தக் கோந்துபோன்ற வஸ்து தண்ணீரில் கரையாது அதனால்தான் சாயம் உலர்ந்த பின் தண்ணீர்விட்டுக் கழுவினாலும் அது போகாமல் இருந்து கொண்டிருக்கிறது, அப்படிக் கட்டியாக ஒட்டிக்கொள்வதால் தான் நாம் சாயம் பூசியுள்ள வஸ்து காற்று மழை பட்டாலும் கெட்டுப் போகாமல் இருக்கிறது.

120அப்பா! அண்ணன் செடிகளுக்குப் போட உரத்தை உரக்குழியில் வெட்டி எடுத்த போது அது சூடாய் இருப்பதாகச் சொன்னானே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நாம் உரக்குழியில் உதிர்ந்த இலைகள், குப்பை கூளங்கள், முதலியவைகளை எல்லாம் போட்டு வைக்கிறோம். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் அவைகள் எல்லாம் மக்கி உருமாறிப் போகின்றன அதற்குக் காரணம் என்ன?

காற்றில் மிதந்து கொண்டும் தரையில் இருந்து கொண்டுமுள்ள பாக்டீரியா என்னும் நுண்ணுயிர்கள் குப்பை கூளங்களில் சேர்ந்து தங்களுக்கு ஆகாரம் தேடுவதற்காக அவைகளைப் பொருள்களாகப் பிரித்து அவற்றிலுள்ள பிராணவாயுவை உபயோகித்துக் கொள்கின்றன. பிராணவாயு எதனுடனேனும் சேர்வதையே எரிதல் என்று கூறுகிறோம். எரியும் பொழுது உஷ்ணம் உண்டாகும். ஆனால் குப்பை கூளங்கள் எங்கே எரிகின்றன. அப்படியே தானே இருக்கின்றன என்று கேட்பாய். அம்மா! அவை எரியத்தான் செய்கின்றன. ஆனால் மெதுவாக எரிவதால்