பக்கம்:தந்தையும் மகளும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தந்தையும்

ஆம், அம்மா! அதற்குக் காரணம் முட்டையில் கந்தகம் இருப்பது தான். அந்தக் கந்தகம் வெள்ளியுடன் சேர்ந்து கறுப்பு நிறமான வேறு ஒரு பொருளாக வெள்ளிக் கரண்டி மீது படிந்துவிடுகிறது. அம்மா! நம்முடைய உடம்பில் உண்டாகும் வேர்வையிலும் கந்தகம் உண்டு. அதனால்தான் வெள்ளிக் காப்பு கருத்துவிடுகிறது.

இப்படி முட்டையில் கந்தகம் இருப்பதால்தான் நாளான முட்டை நாற்றம் எடுக்கிறது. முட்டையிலுள்ள கந்தகம் ஹைட்ரோஜன் என்னும் வாயுடன் சேர்ந்து உண்டாகும் வாயுதான் அந்த நாற்றத்துக்குக் காரணம்.

சிலர்க்கு முட்டைக் கோஸ், வெங்காய மணம் பிடிப்பதில்லை. அவற்றின் மணமும் அவற்றிலுள்ள சொற்ப கந்தகத்தினுடையதேயாகும்.

133அப்பா! யந்திரசாலைப் புகை போக்கியில் வரும் புகை அதிகக் கறுப்பாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அடுப்பில் விறகு எரியும்போது அதிலுள்ள கரி பிராணவாயுவுடன் சேர்ந்து கரியமில வாயுவாகவும், ஹைட்ரோஜன் பிராண வாயுவுடன் சேர்ந்து நீராவியாகவும் ஆகின்றன. கரியமில வாயுவும் நீராவியும் கறுப்பு நிறம் உடையன அல்ல. ஆனால் விறகிலுள்ள கரி எரிவுதற்கு வேண்டிய காற்று போதுமான அளவு கிடையாமற் போனால், அப்பொழுது அது நுண்ணிய தூள்களாக மேலே கிளம்பும். அதைத்தான் புகை என்று கூறுகிறோம்.

நிலக்கரி எரியும் போதும் அதற்குப் போதுமான பிராணவாயு கிடைக்குமானால், அது முற்றிலும் எரிந்து போகும், புகை உண்டாகாது. ஆனால் அப்படி நிகழ்வதில்லை. சிகாகோ நகரத்திலுள்ள யந்திரசாலைகளில் மட்டுமே ஆண்டுக்கு இரண்டு லட்சம் டன் நிலக்கரி