பக்கம்:தந்தையும் மகளும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

143

அம்மா! எந்தப் பொருளை எரித்தாலும் அதிலிருந்து கிடைக்கும் உஷ்ணத்தைவிட அதிகமான உஷ்ணம் ஹைட்ரோஜன் என்னும் வாயுவை எரித்தால் கிடைக்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஹைட்ரோஜனை எளிதில் பெறமுடியாது.

ஆயினும் அந்த ஹைட்ரோஜன் ஓரளவு நிலக்கரியிலும் இருக்கிறது. அத்துடன் அதில் கரியும் இருக்கிறது. அந்தக் கரி கொஞ்சம்கூட நீர் இல்லாததாகவுமிருக்கிறது. அதனால் அதிலுள்ள கரி முழுவதும் எரிந்து அதிகமான உஷ்ணத்தைத் தருகிறது.

அடுப்புக் கரியை எவ்வளவு நன்றாக உலர வைத்தாலும் அதில் ஓரளவு நீர் இருக்கவே செய்யும். அதனால் அது கரியை நிலக்கரி போல் அதிக உஷ்ணமாக எரியவிடாது.

145அப்பா! தட்டார் தங்கத்தைக் காயவைக்கவும், கொல்லர் இரும்பைக் காயவைக்கவும் விறகை எரிக்காமல் கரியை எரிக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! விறகில் கரியும் இருக்கிறது. அத்துடன் வேறு பல பொருள்களும சேர்ந்திருக்கின்றன. அதனால் விறகு எரியும்போது கரியும் எரிகிறது, அந்தப் பொருள்களும் ஆவியாக மாறி எரிகின்றன. கரிசுடர் விடாது, அவை சுடர் விடும். அத்துடன் அவற்றால் உண்டாகும் வாயுக்கள் கரி பிடிக்கும்படியும் செய்யும்.

அதனால் தங்கத்தையோ, இரும்பையோ காய்ச்சுவதற்கு விறகை எரித்தால் தங்கமும் இரும்பும் கறுப்பாகிவிடும். அத்துடன் அவை நன்றாகக் காய்ந்து விட்டனவா இல்லையா என்று பார்க்க வொட்டாதபடி சுடரும் தடுத்து விடும். அதனால்தான் தட்டாரும் கொல்லரும் விறகை உபயோகியாமல் கரியை உபயோகிக்கிறார்கள்.