பக்கம்:தந்தையும் மகளும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

145

ஆனால் காற்றிலுள்ள நீராவி முதலியவை மரத்தைக் கெடுத்துவிடக் கூடியவை யாகும். அதனால் அவை மரத்தில் சேர வொட்டாமல் தடுக்கவேண்டும். அப்படிச் செய்தால் தான் மரச் சாமான்கள் கெட்டுப் போகா.

அம்மா! வர்ணம் என்பதில் உள்ள தாய்ச் சரக்கு ஈய வெள்ளை என்பதாகும். அதோடு நிறச்சாயங்கள் சேர்த்தால் பல நிறமுடையதாகும். அதன்பின் அத்துடன் யாளிவிதை நெய்யையும் டர்ப்பெண்டைன் என்னும் கர்ப்பூர நெய்யையும் சேர்ப்பார்கள். கர்ப்பூர எண்ணெய் வர்ணத்தை உலரும்படி செய்ய உதவுகிறது. வர்ணம் உலரும் போது யாளிவிதை நெய்யானது காற்றிலுள்ள பிராண வாயுவுடன் சேர்ந்து வர்ணத்தின்மீது பிசின் போல் படிந்து விடுகிறது. அதுதான் மரத்தைப் பாதுகாத்துத் தருகிறது. ஆகவே வர்ணம் அழகையும், யாளிவிதை நெய் பாதுகாவலையும் அளிக்கின்றன என்று கூறலாம்.

148அப்பா! பாத்திரத்தை விறகு அடுப்பில் வைத்தால் கரிப்பிடிக்கிறது, கரி அடுப்பில் வைத்தால் கரி பிடிக்கவில்லை, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கரியடுப்புக்கு உபயோகிக்கும் கரியை மரத்தைச் சுட்டுத்தான் உண்டாக்குகிறார்கள். ஆயினும் கரியடுப்பில் கரிப்பிடிப்பதில்லை, அதற்குக் காரணம யாது?

அம்மா! விறகில் கரியோடு வேறு பல வஸ்துக்களும் உள. நாம் மரத்தைச் சுட்டுக் கரியாக்கும் போது அந்த வஸ்துக்கள் ஆவியாகி வெளியே போய் விடுகின்றன, கரி மட்டுமே தங்குகிறது.

அதனால் விறகு வைத்து எரிக்கும் போது அதிலுள்ள கரி எரிகிறது; மற்ற வஸ்துக்கள் ஆவியாகி மேலே கிளம்பி

த--10