பக்கம்:தந்தையும் மகளும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தந்தையும்

உயிர்ப் பிராணிகள் மட்டும்தானே பல்கிப் பெருகும் தன்மை உடையன, அந்தத் தன்மை உயிரில்லாத இந்த வைரஸுக்கு இருக்கிறதே, அதனால் ஆதியில் உயிரில்லாத வஸ்துவிலிருந்து உயிர் உண்டாயிருக்க முடியும் என் கருதுகிறார்கள்.

ஆனால் இவர்கள் கருத்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவு என்று கருதமுடியாது.

158அப்பா! நல்ல கிருமிகளும் உண்டு என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கிருமி என்றவுடன் நமக்கு நோய்க்கிருமி தான் என்ற எண்ணம் உண்டாகும். ஆனால் நாம் கிருமி என்று கூறுவது புழுமாதிரியான பிராணியன்று, செடியினத்தைச் சேர்ந்ததேயாகும். அதை வெறுங் கண்ணால் பார்க்க முடியாது. பூதக்கண்ணாடி மூலமாகத்தான் பார்க்க முடியும். அப்படிப்பார்க்கும் போது அது சாதாரணமாக நுண்ணிய குச்சிபோலிருப்பதால் அதற்கு குச்சி என்று பொருளுள்ள பாக்டீரியா என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்கள்.

அம்மா! பாக்டீரியாக்களுள் பல இனங்கள் உண்டு. சில நமக்கு நோயை உண்டாக்கும், சில வெண்ணெய்யை நாறச் செய்யும், சில உணவுகளில் சேர்ந்து விஷத்தை உண்டாக்கும்.

ஆனால் நமக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் உள. அவற்றுள் சில இறந்துபோன செடிகளையும், பிராணிகளையும் அவற்றை மண்ணோடு மண்ணாகச் செய்து விடுகின்-