பக்கம்:தந்தையும் மகளும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

185

ஓடுவதற்கும் தண்ணீர் தேவையாகும், நாம் தண்ணீரைக் குடிக்கிறோம். மரஞ் செடிகள் தரையிலுள்ள தண்ணீரை வேர் மூலம் கிரகித்துக் கொள்கின்றன. நாம் குடிக்கும் தண்ணீர் சிறுநீராகவும் வேர்வையாகவும் வெளியே போய் விடுகிறது. அதுபோலவே மரஞ் செடிகள் கிரகிக்கும் தண்ணீரும் இலைகள் மூலமாக ஆவியாக வெளியே போய்விடுகிறது.

வேனிற் காலத்தில் மழை கிடையாது. அதனால் மரஞ்செடிகளுக்குத் தரையில் கிடைக்கக் கூடிய தண்ணீர் குறைவாகவே இருக்கும். அதனால் மரஞ்செடிகள் வேனிற் காலத்தில் சொற்பத் தண்ணீரைக் கொண்டே காலந்தள்ள வேண்டும். அதற்காக நீர் ஆவியாக வெளியே போவதைத் தடுக்க வேண்டியதா யிருக்கிறது. அப்படித் தடுப்பதற்காகத்தான் மரஞ்செடிகள் வேனிற் காலத்தில் இலைகளை உதிர்த்து விடுகின்றன.

198அப்பா! பூக்கள் அழகாகவுமிருக்கின்றன. நல்ல மணமாகவும் இருக்கின்றன, அதற்குக் காரணம்?

ஆம், அம்மா! ஆனால் அவை அழகாயிருப்பதும் நறுமணம் வீசுவதும் நமக்காக அன்று. மரஞ்செடிகளும் அவைகளின் மலர்களும் மனிதன் தோன்றுவதற்கு லட்சக்கனக்கான ஆண்டுகட்கு முன்னரே தோன்றியவை. ஆதலால் அவற்றின் நிறத்துக்கும் மணத்துக்குமுரிய காரணம் வேறாகும். கூறுகிறேன் கேள்.

அம்மா ! பூமியில் காய் உண்டாகிறதே, அது எப்படி உண்டாகிறது? இந்தப் பூவின்

படத்தைப் பார்.அதிலுள்ள மகரந்தப் பையிலுள்ள மகரந்தப் பொடி சூல் முடியில் ஒட்டிக்கொண்டு பிறகு சூல்தண்டு வழியாகக் கீழே இறங்கி சூல்ப்பையிலுள்ள முட்டைகளுடன் சேர்ந்து விதைகள் ஆகின்றன.