பக்கம்:தந்தையும் மகளும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 படங்கள் சேர்ந்த
புதிய திருத்திய பதிப்பு : ஆகஸ்ட் 1985


பொ. திருகூடசுந்தரம்
எம். ஏ., பி, எல்

1891-ஆம் ஆண்டில் பிறந்தவர். 5-வது பாரம் முதலே முதற் பரிசு பெற்றார். எம். ஏ.-இல் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றார். 1921-இல் வக்கீல் வேலையைவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். திருநெல்வேலி ஜில்லாவிலும் செட்டி நாட்டிலும் காந்திய இயக்கத்தை வேரூன்றச் செய்தார். காந்தியடிகளின் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர். திருநெல்வேலி நகர சபையில் அங்கத்தினராகவும், தேவகோட்டை நகரசபையில் வைஸ் சேர்மனாகவும் இருந்து சமூக சேவை செய்தார். தீண்டாமை விலக்குக்குத் தீவிரமாக உழைத்தார். அவரும் அவர் மனைவியாரும் நாகர் கோவில்லில் தீிண்டாமை விலக்குச் சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலினார். தமிழ் ஹரிஜன் பத்திரிக்கைக்கு ஆசிரியராயிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பாண்டித்தியமுடையவர். சென்னை செனட் சபையில் அங்கத்தினராக இருந்தார். தமிழில் சொந்தமாகப் பத்து நூல்களும், மொழி பெயர்ப்பாகப் பத்து நூல்களும் எழுதியுள்ளார். அவை அறிவும் இன்பமும் பெற விரும்புவோர், படிக்க வேண்டிய நூல்கள். சென்னை சர்க்கார் மூன்று நூல்களுக்கு பரிசு அளித்துள்ளார் சிறந்த கட்டுரையாளர். விஞ்ஞானம் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்குமாறு எழுதக்கூடியவர். இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர், எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையுமுடையவர்.


அச்சிட்டோர்: செளதரி பிரிண்டர்ஸ் சென்னை-600 026.