பக்கம்:தந்தையும் மகளும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தந்தையும்

லாம், எண்ணெயாயிருந்தால் ஜலத்தைக் கொட்ட கூடாது. கொட்டினால் தீ அதிகப்படவே செய்யும். அந்தச் சமயத்தில் மண்ணோ மணலோ போட்டு அணைக்க வேண்டும். மின்சாரத்தில் தீப் பற்றினாலும் மணலையே உபயோகிக்கவேண்டும். அதற்காகத் தான் பாடசாலை போன்ற கட்டடங்களில் வாளிகளில் மணலை நிறைந்து வைத்திருக்கிறார்கள். துணிகளில் பற்றும் நெருப்பையும் மணலைக்கொண்டு அணைக்கலாம்.

கட்டடங்களில் தீப்பிடித்தால் அதை அணைப்பதற்காக அரசாங்கத்தார் "நெருப்பு அணைக்கும் இயந்திரங்களை" பெரிய பட்டணங்களில் வைத்திருக்கிறார்கள். அத்தகைய பட்டணங்களில் உள்ளவர்கள் கட்டடங்களில் தீப்பற்றினால் உடனே அந்த இயந்திர நிலையத்துக்குத் தகவல் கொடுப்பது நல்லது.

இத்தனையும் நான் கூறினாலும் நெருப்புப் பிடிக்க இடம் தராமல் கவனமாக நடந்து கொள்வதே எல்லாவற்றிலும் நல்லதாகும். அதனால் அம்மா! நீ எப்பொழுதும் ஜாக்கிரதையாக நடந்து கொள்.

63அப்பா! ஜன்னல் கண்ணாடி கீறிய இடத்தில் வெள்ளி போல் மின்னுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கண்ணாடியில் ஒளிபட்டால் ஒளியின் பெரும் பாகம் கண்ணாடி வழியாக வெளியே போய் விடுகிறது. கண்ணாடியில் படும் ஒளியில் ஒரு சிறிய அளவே கண்ணாடியிலிருந்து நம்முடைய கண்ணுக்கு வந்து சேர்கிறது. அந்த ஒளி கண்ணாடியை நம்முடைய கண்ணுக்குத தெரியும்படி செய்வதற்கு மட்டுமே உதவுகிறது. கண்ணாடியைப் பளபளப்பாக்குவதில்லை.

ஆனால் கண்ணாடி கீறிப்போனால் அந்த இடத்தில் படும் ஒளி கண்ணாடி வழியாக மறுபக்கம் போக