பக்கம்:தந்தையும் மகளும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தந்தையும்


70அப்பா! மின்சார விளக்குகளுக்கு வழவழப்பான பல்புகளை உபயோகிக்கசகூடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நமமுடைய கண்ணுக்குக் கேடு செய்யாததும் தமானதுமான வெளிச்சம் நம்முடைய கண்ணைவிட உயரமான இடத்திலிருந்தும் வரவேண்டும், நேராக வராமல் சிதறியும் வரவேண்டும். அதனால்தான் கூரையில் மாட்டியுள்ள மின்சார விளக்குகளுக்கு வழவழப்பான பல்புகளை உபயோகிக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்.

ஒளியானது விளக்கிலிருந்து நேராக வருமானாலும் அல்லது அது முகம் பர்க்கும் கண்ணாடி போன்ற பளபளப்பான

பொருள்கள் மீது பட்டு வருவதானாலும் அதன் கிரணங்கள் அநேகமாக சமதூரக் கிரணங்களாகவே இருக்கும். வழவழப்பான சாதாரண பல்பு வழியாக வரும் கிரணங்கள் சம தூரமான கிரணங்களேயாகும். சமதூரக் கிரணங்கள் கண்ணுக்கு இதமாகவும் இரா, கேடு செய்யும். ஆனால் பகலில் சூரிய ஒளி சாதாரணமான சுவரில் பட்டு வருவதைப் பார். சுவர் கண்ணாடியைப்போல் வழவழப்பாக இல்லை. கரடுமுரடாகஇருக்கிறது. அதாவது அது அநேக வழவப்பான பொருள்களை ஒழுங்கின்றி நெருக்கமாக அடுக்கி

வைத்ததுபோல் உள்ளது. அதனால் அதன்மீது விழும் சூரிய ஒளி அந்தப் பல பொருள்களில் பட்டு நாலா பக்கமும் திரும்பி வருவதால் சிதறியே