பக்கம்:தந்தையும் மகளும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

87

உண்டு. இந்தச் சக்தியால் உண்டாகும் நீர்த்தோல்தான் தண்ணீர்த் துளிகளை உருண்டை வடிவமாகச் செய்கின்றது.

82அப்பா! இப்பொழுது ஓடும் கார்கள் எல்லாம் உருண்டையாகவும் நீளமாகவும் இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! நீ பெட்டிவண்டி பார்த்திருக்கிறாய் அல்லவா? அது போல்தான உயரமாகவும் பெட்டி மாதிரி முன்னாலும் பின்னாலும் தட்டையாகவும் இருந்தன சில வருஷங்கட்கு முன் ஒடிய மோட்டார் கார்கள் எல்லாம். ஆனால் இப்பொழுது கார்களை முன்னால் உருண்டையாகவும் பின்னால் கூர்மையாகவும் மழைத்துளியின் உருவத்தைப் போல் இருக்கும்படி செய்கிறார்கள். அதனால்தான் இக்காலத்துக் கார்கள் எல்லாம் முன்னிலும் அதிக வேகமாக ஓட முடிகிறது. அது எப்படி என்று கேட்பாய், கூறுகிறேன்.

சில வருஷங்கட்குமுன் செய்த கார் ஓடும் பொழுது அதன் முன்னாலுள்ள காற்று அதை எதிர்த்துவந்து தாக்கும். காரின் முன்பாகம் தட்டையாகவும் அகலமாகவும் இருப்பதால் தாக்குதல் அதிகமாயிருக்கும். அதனால் கார் எளிதாக ஓட முடிவதில்லை.

அத்துடன் காரைத் தாக்கிய காற்று இரண்டு பாகமாகப் பிரிந்து வண்டியின் ஒரமாகப் பின்புறம் பாய்ந்து செல்லுகிறது. ஆனால் பின்புறமும் கார் அகலமாகவும் தட்டையாகவும் இருப்பதால் இரண்டு காற்றும் காரின் பின் புறத்தில் சேராமல் சிறிது தூரம் சென்றபின்னரே சேர்கின்றன அதனால் காரின் பின் புறத்தில் காற்றில்லாத வெற்றிடம் உண்டாகிறது. அந்தக் காரணத்தால் காரை முன்னாலிருந்து காக்கும் காற்று காரைப் பின்புறம் தள்ள முடிகிறது. அதனாலும் கார் வேகமாகச் செல்ல முடியாமல் போகிறது.