ஒன்றாக இன்று நம்மிடையே உயர்வு தாழ்வு உருவாகிவிட்டது.
கடவுள் மனிதனைப்படைத்தான். மனிதன் சாதியைப் படைத்தான். அதில் பல பிரிவுகளையும் படைத்து - சிலரைத் தீண்டாதவர்களாகவே உருவாக்கி விட்டார்கள்.
தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு இனத்தவரைக் குறிப்பிடுவது மனித மனத்தைப் புண்படுத்தக் கூடிய செயலாகும்.
அதனாலே மகாத்மா காந்தி அவர்களை அரிசன் என்று புதிய பெயரிட்டு அழைக்கலானார். சமூகத்தில் அவர்களுக்கும் சம உரிமை வேண்டுமென்று வடக்கே இருந்து குரல் கொடுத்தார்.
தெற்கே வாழ்ந்த ஈ.வே.ரா.வின் செவிகளில் காந்திஜியின் இந்தக் குரல் தேனாகப் பாய்ந்தது. அவரது கொள்கைகளும் தனது கொள்கைகளும் ஒரே இலட்சியப் பாதையை நோக்கித்தான் பயணமாகின்றன என்பதை ஈ.வே.ரா. புரிந்து கொண்டார்.
அன்றிலிருந்து காந்திஜியிடமும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி மீதும் ஈ.வே.ரா. மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டார்.
காங்கிரஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் அவரது மனதைக் கவர்ந்தன.
ஈ.வே.ரா.வுக்கு நண்பராக விளங்கியவர் இராச கோபாலாச்சாரியார்.