பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

107


இதைச் சற்றும் எதிர்பாராத அரசாங்கம் ஆழ்ந்து யோசனை செய்தது.

பெண்களைக் கைது செய்தால் ஊரில் பெருங் கலவரம் மூளும். அதனால் ஆயிரக் கணக்கில் மக்கள் சிறை செல்லுவர்.

இதைத் தவிர்க்க ஒரே வழி -

தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இப்போராட்டத்தில் ஈ.வே.ரா.வின் குடும்பம் முழுதும் ஈடுபட்டதை அறிந்த காங்கிரஸ்காரர்கள் உற்சாகமானார்கள்.

தமிழ்நாடு முழுதும் கள்ளுக்கடை மறியல் போராட்டம் தீவிரமடைந்தது.

தமிழகத்தில் மது விலக்குப் போராட்டத்திற்காக காந்திஜி தமிழ்நாடு வந்தபோது ஈ.வே.ரா. வீட்டில்தான் தங்கினார்.

அங்குதான் மதுவிலக்குப் போராட்டத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டது.

அவர் எண்ணியது போல் தமிழகம் கள்ளுக்கடைப் போராட்டத்தில் சிறப்பான பணியாற்றியது. இதைப் பற்றி காந்திஜி கூறுகையில் -

கள்ளுக்கடைப் போராட்டத்தின் வெற்றி ஈரோடிலுள்ள நாகம்மை, கண்ணம்மாள் ஆகிய இரு பெண்களிடம்தான் இருக்கிறது. அவர்கள் பாதிக்கப்படும் பெண் இனத்தின் பிரதிநிதிகள் ஆவார்கள் என்று பெருமையுடன் கூறினார்.