பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தந்தை பெரியார்



பொது வாழ்க்கையில் மூழ்கி நின்ற காந்தி அண்ணல் கஸ்தூரிபாயின் உயிரற்ற உடலைக்கண்டு குமுறிக்குமுறி அழுதாராம்.

காந்தியைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பெரியார் ஈ.வே.ரா. - பொது வாழ்க்கைக்காக ஈரநெஞ்சைக் கல் நெஞ்சாக மாற்றிக் கொண்ட கதையை நீலமணியின் எழுத்து நமக்கு நேர் படக்காட்டும் விதம் அருமை - அற்புதம் - அழகு!

மொத்தத்தில் இது ஒரு வரலாற்றுப் பெட்டகம் - தமிழரின் அடையாளமாகத் திகழும் குறள் நூலைப் போல் ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் இந்நூல் இருக்க வேண்டும்.

புலவர் அறிவுடைநம்பி

(மேனாள் சட்டவை மேலவை உறுப்பினர்)



அம்புஜம் இல்லம்
A1 பிளாக் பழைய எண் 9213,
புது எண் - 15
9வது மெயின் ரோடு,
அண்ணாநகர், சென்னை - 600 040.