பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

143


சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டு, அதை அகிம்சை முறையில் வாங்கித் தந்தவர் அண்ணல் காந்திஜி.

நாடே நன்றிக் கடன் செலுத்த வேண்டிய அந்த மகானின் மார்பை, நாதுராம் விநாயக் கோட்சே என்னும் கொடியவன், இரக்கமின்றித் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தான்.

காந்திஜி கொலையுண்டதும், நாட்டிலுள்ள பல இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.

அப்போது தமிழக முதல்வராக இருந்த ஒமந்தூர் இராமசாமி, மீண்டும் இந்தியைக் கொண்டுவந்தார்.

நாடெங்கும், இந்தித் திணிப்பை எதிர்த்து கிளர்ச்சி மூண்டது.

1948-ம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில், இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில், சென்னைக்கு வரும் இராஜாஜிக்கு கறுப்புக் கொடி காட்டுவதென்று முடிவாயிற்று.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் கைது செய்யப்பட்டு; பிறகு விடுதலையானார்.

1948 -ம் ஆண்டு, மீண்டும் பெரியார், கும்பகோணத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் கலந்து கொண்டார். அரசு அவரைக் கைது செய்தது.

பொது வாழ்வில் பெரியார் கைதானது, இது பத்தாவது தடவையாகும். ‘விரும்பும்வரை, இந்தி திணிக்கப்பட மாட்டாது' என்று நேருஜி வாக்களித்தார்.

விடுதலையடைந்து வந்த பெரியார், செயற்குழுவைக் கூட்டினார்.