பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தந்தை பெரியார்



1904 - ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானார். (அக்குழந்தை 5 மாதத்தில் இறந்தது பின்னர் குழந்தையே இல்லை.)

1907 - காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோடில் காலரா நோய் பரவிய போது யாரும் உதவிக்கு வராத நிலையில், துணிந்து மீட்டுப் பணியாற்றினார்.

1909 - எதிர்ப்புக்கிடையில், தங்கையின் மகளுக்கு விதவா மறு திருமணம் செய்து வைத்தார்.

1911 - தந்தையார் இறந்தார்.

1917 - ஈரோடு நகர மன்றத் தலைவரானார். நகரில் குடிநீர், சுகாதார வசதிகளைச் செய்தார். 28, மதிப்பு மிக்க பதவிகளை வகித்தார்.

1918 - காங்கிரசு மாநாடுகளை முன்னின்று நடத்தினார்.

1919 - நகர மன்றத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். காங்கிரசு இயக்கத்தில் உறுப்பினர் ஆனார்.

1920 - மதிப்பு மிக்க பதவிகள் அனைத்திலிருந்தும் விலகினார். காங்கிரசு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.

1921 - ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் நடத்தினார். கள் இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட தமக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார்.