பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தந்தை பெரியார்


நாகம்மையாருடன் மலேசியா நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

1930 - மலேசியாவிலிருந்து தமிழகம் திரும்பினார். பயண நாட்களில் தாடி வளர்க்க நேர்ந்தது; நிலையானது.

1932 - எகிப்து, கிரீசு, துருக்கி, உருசியா, இங்கிலாந்து, வேல்சு, சுபெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், இத்தாலி, பிரான்சு, இலங்கை முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் (13.12.1931 முதல் 11.11.1932) வரை மேற்கொண்டார். 11 மாதத்திற்குப் பிறகு ஈரோடு திரும்பினார்.

1933 - நாகம்மையார் மறைந்தார் (11.5.33). 21.5.1933 முதல் மேதினம் கொண்டாட கூறினார். 'புரட்சி' வார இதழ் தொடங்கப்பட்டது.

1934 - புரட்சி இதழ் நிறுத்தப்பட்டு, 'பகுத்தறிவு' இதழ் தொடங்கப்பட்டது.

1935 - நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்தார்.

1938 - இந்தித்திணிப்பை எதிர்த்துச்சிறை சென்றார் (பெல்லாரி சிறையில் வைக்கப்பட்டார், 2 ஆண்டு சிறைக் காவல் தண்டனை - 2000 - ரூபா).

சிறையிலிருக்கும் போதே நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (29.12.1938). 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கினார். பெண்கள் மகாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.