பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

175



1964 - நில உச்சவரம்புக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எரித்தார்.

1965 - நாடெங்கும் இராமாயணத்தை எரிக்கச் செய்தார் (6.4.1965).

1967 - பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.

★ தமிழக முதல்வர் அண்ணா பெரியாரைச் சந்தித்தார். ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கையாக்கினார்.

★ முதன் முதலில் திருச்சியில் பெரியாருக்குச் சிலை வைக்கப்பட்டது (17.9.1967).

★ சுயமரியாதைத் திருமணம் சட்ட வடிவம் பெற்றது.


1968 - தனித்தமிழ்நாடு கோரி, டில்லி ஆதிக்கக் கண்டன நாள் மேற்கொண்டார்.

1969 - இன இழிவை நீக்கக் கோவில் கர்ப்பக்கிரகங்கள். கிளர்ச்சி பற்றி அறிக்கை வெளியிட்டார்.

1970 - 'உண்மை' இதழைத் தொடங்கினார். யுனெசுகோ இவருக்கு விருது வழங்கிப் பாராட்டியது.

1971 - கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராய் இருந்த காலத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது.

★ பெரியார் கோரிக்கை நிறைவேற வழி வகுக்கப்பட்டது (12.11.1971).