பத்தாண்டுகள் இப்பதவியை ஈ.வெ.ரா. திறமையாக நிர்வகித்தார். தொடர்ந்து தாலுகா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் கெளரவ நீதிபதியாகவும் பணியாற்றினார்.
ஈரோட்டு நகரசபைத் தலைவராக ஈ.வெ.ரா. விளங்கியபோது மக்களுக்கு அரிய திட்டங்கள் மூலம் பல நன்மைகள் செய்தார்.
காவிரியிலிருந்து அந்நகருக்குக் குடி தண்ணீர் கொண்டு வரும் திட்டம் வகுத்தார். நகர் முழுதும் குழாய்கள் போட ஏற்பாடு செய்தார். விரைவிலேயே பணி முடிந்து; நகர மக்கள் நல்ல காவிரி நீரைப் பருகி மகிழ்ந்தனர்.
தங்களுடைய இந்த நன்றியைத் தெரிவிக்க பொதுமக்கள் மகிழ்ச்சியோடு ஈ.வெ.ரா.வின் பெயரைக் கல்லில் செதுக்கி நட்டனர். இதனால் ஈ.வெ.ரா மீது சிலர் பொறாமை கொண்டனர்.
"வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமில்லாமல் போய்விட்டது.
இவைகளைச் சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?"
பணத்தை வாரி இறைத்துச் சிலர் பதவியைப் பிடிப்பார்கள். பதவிக்கு வந்தபின், செலவழித்த பணத்தை