பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

எழுத்தாளரும் அச்சக உரிமையாளருமான அன்பர் ஜி.டி. முத்து, இதை அவர் சொந்தப் பணியாகவே ஏற்றுத் துவக்கமுதல் தொண்டாற்றினார். கனரா பிரிண்டர்சார் மேலட்டையினை அழகுற அச்சிட்டனர். இவர்களுக்கெல்லாம் 'நன்றி' என்ற மூன்றெழுத்தால் என் உள்ள உணர்வு களை வெளியிட ஒல்லுமா?

இன்றைக்கு நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியாரை ஆய்வு செய்வதால், வரலாற்றில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் (Factual errors) வந்துவிடாமலிருக்க அதிகக் கவனம் செலுத்தினேன். என்னைமீறி ஏதாவது குற்றங் குறைகள் தவறுகள் பிழைகள் இருப்பின், அன்பர்கள் சுட்டிக் காட்டினால், வணங்கி ஏற்றுக்கொள்வேன்.

வணக்கம்,

எஸ். கருணானந்தம்.

24-12-1979