உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 மடைந்த செய்தி பெரியாரைப் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிற்று' இழப்பை வெகுவாக உணர்ந்து வருந்தினார் பெரியார். 14-7-53 அன்று ஆச்சாரியாரின் அடக்குமுறை வெறி யாட்டம் தலைவிரித்து ஆடியது. முதல் நாள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களில் முக்கிய அய்வராகிய அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 14-ம் நாள் சென்னையில் குருசாமி தலைமையில் 30தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் அடித்து நொறுக்கப்பட்டனர். 16-ம் நாள் கணக்கின்படித் தமிழகமெங்கும் பெரியாரின் தொண்டர்கள் கைது செய்யப் பட்டவர்கள் 1700 பேர்; மருத்துவமனையில் 50பேர்; அடக்கு முறை துப்பாக்கிக் குண்டு தடியடிக்குப் பலி 10பேர்; கை கால் உறுப்பு இழந்தோர் 10 பேர். 20-7-53 மறியலில் திராவிடர் கழகத் தொண்டர்கள்.2450 பேர் கைதாயினர். ஆங்காங்கு நடைபெற்ற (துரத்துக்குடி, கல்லக்குடி) துப்பாக்கிப் பிரயோகங்களைக் கண்டிக்க 24-7-53 அன்று நாடெங்கும் கடையடைப்பும் வேலை நிறுத்தமும் கடைப்பிடிக்க. வேண்டினார் பெரியார். சென்னையில், ஊர்வலமும் பொதுக் கூட்டமும் பெரியார் கலந்துகொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற்றன. முதல்வர் வீட்டுமுன் மறியல் தொடர்ந்தது. அண்ணா குழுவினர் அய்வரும் ஜாமீனில் 24-ம் நாள் வெளி வந்தனர். அவர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டது. 500ரு. அபராதம் கட்டமறுத்து அய்வரும் 3 மாதச் சிறைதண்டனை ஏற்றனர் 19-1953-ல், கலைஞர் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றுத் திருச்சி சிறைக்கு ஏகினார். -- ஆகஸ்டு 1-ஆம் நாள் ரயில் நிலைய இந்தி அழிப்புப் போர். தொண்டர்களைப் பெரியார் எச்சரித்தார். சென்ற ஆண்டு போலவே செய்யவேண்டும். அனைவரும் கருஞ் சட்டை அணியவேண்டும். இந்தி ஒழிக. தமிழ் வாழ்க என்று மட்டுமே முழக்கமிடவேண்டும். ஜாமீனில் யாரும் வெளி வரக்கூடாது என்றும்-தாம் சேலத்தில் இந்தி அழிப்ப தாகவும்-பெரியார் அறிவித்தார். அத்துடன், தொண்டர்