484 திரு அண்ணாதுரை கூறுகிறார். ராஜாஜியோ (சுதந்திரா) மனைவியின் (திமுக) நடத்தை சரியில்லை என்கிறார். நடக்கட்டும் கதை, ஊர் சிரிக்கிற வரை' என்று! லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் ஒரு நாள் பேசும்போது தி.மு.க உறவு பற்றி ராஜாஜி குறிப்பிட்டார்:-இராமன் சொன்னான்-சீதா நான் உன்னை மீட்பதற்காகப் போரிட வில்லை; இராவணனை அவமானப்படுத்தவே போரிட்டேன்’ என்று. அது போல, "நான் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த் தப் பாடுபடவில்லை; காங்கிரசை (காமராஜை) ஒழித்து அவமானப்படுத்தவே பாடுபட்டேன். அதில் ஜெயித்தேன்’ என்றார். இதை எடுத்தாண்டு, விடுதலை’ ஏளனம் செய்தது! *。 - பெரியார் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, மந்திரிகள் பயபக்தியுடன் எதிரில் நிற்க, ராஜாஜி மெதுவாய் எட்டிப் பார்க்க, சுதேசமித்திரன்’ கார்ட்டுன் போட்டது; "நானிருக்க பயமேன்?" என்று தலைப்பு இதையும்ராஜாஜி- எனக்கு இந்தக் கண்ட்ரோலைக் கண்டால் பிடிக்காது’’; அண்ணா-'அதனாலேதான் என் மேலே உங்களுக்கு இருக்கிற கண்ட்ரோலை கொஞ்சம் கொஞ்சமா எடுத்திட்டுவாரேன்” என்பதாக ஆனந்த விகடன் வெளி யிட்ட கார்ட்டுனையும், விடுதலை’ வெளியிட்டு, அவாள் உள்ளத்தை எக்ஸ்ரே படம் பிடித்துக் காட்டிற்று! 9-ந் தேதி திருச்சிக் கமிட்டிக்கு முன்பும், பெரியார் விடுதலை'யில் தொடர்ச்சியாகச் சில தலையங்கப் பகுதிக் கட்டுரைகள், ஆட்சியாளர்க்கு அறிவுரைகளாகத் தீட்டி வந்தார்:-"இது பகுத்தறிவாளர் ஆட்சி என்பதால் கூறு கிறேன். நான் சமதர்மவாதிதான் என்றாலும், முதலில் பகுத் தறிவுவாதி பத்திரிகைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சர்க்கார் தரும் அதிகார பூர்வமான செய்திகளை, இன்ன மாதிரியான முறையில் பிரசுரிக்கவேண்டும் என்பதாக உத்தரவிட வேண்டும். உணவுப் பிரச்சினையைச் சமாளிக்க மக்கள் உணவுப் பழக்கத்தை மாற்றும்படிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். சர்க்காரே உணவுப் பண்டங்களை
பக்கம்:தந்தை பெரியார்.pdf/515
தோற்றம்