உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

657 விட்டாலும், கோபுரம் தாங்கும் பொம்மைபோல் என்னை நானே நினைத்துக்கொண்டு, குடும்பஸ்தனைப் போலப் பெரிய கவலையோடு, தி. மு. கழகத்தை ஆதரிக்கிறேன் என்பதில் மாற்றமில்லை! கலைஞர் கருணாநிதி அவர்களின் புத்திசாலித்தனத்தைப் பற்றி நிறையப் படித்து வருகிறோம். அடுத்தபடியாகவும் இவர் ஆட்சி வந்தால்தானே வேலை. இல்லாவிட்டால் தமிழ் நாடே சூத்திர நாடாகி விடுமே!’ என்றெழுதினார். எல்லா வகுப்பாருமே பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் என்கிற மசோதாவை, அற நிலையத் துறை அமைச்சர் கே. வி. சுப்பய்யா 30.11-70-ல் சட்டமன்றத்தில் முன் மொழிந்தார்; 2-12-70 அன்று எதிர்ப்பின்றி அம்மசோதா நிறைவேறியது. பகுத்தறிவாளர் கழகம், சொசைட்டி ஆக்டின்படி 2-12-70 அன்று பதிவு செய்யப் பட்டது. "ஆச்சாரியார் தி. மு. க. ஆட்சியைக் கவிழ்க்கவோ ஒழிக்கவோ தமிழ்ப் பயிற்சிமொழித் திட்டத்தை ஆயுதமாக எடுத்தாளப் பார்க்கிறார். அதற்கு ஆட்சியாளரும் இடந் தரக் கூடாது. எனக்குத் தமிழ்மீது வெறுப்பில்லை. நான் வீட்டிலும் வெளியிலும் பேசுவது தமிழ். படிப்பது தமிழ். எழுதுவதும் தமிழ். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று, சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ், வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகின்றது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை. ஆகையால் தமிழில் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாக அரசு கூறவேண்டிய தாகிறது. இது வரவேற்கத் தக்கதே. ஆனாலும் இதைச் சாக்காக வைத்து, ஆட்சியை எதிர்க்கிறார்கள். இனி காங்கிரஸ் ஆட்சி வந்துவிட்டால் என்ன செய்வது? என்னால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. எப்படிப் போராடுவது?" என்று பல அய்ய வினாக்களை, "நமது கடமை'என்ற தலைப்பின் கீழ்த் தாமே எழுதிய'விடுதலை’ பெ.-42 -