பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தனித்தமிழ்க் கிளர்ச்சி



பொய்தானும் இல்லையிது பொருத்தமே தெய்வத்தை
வைதாலும் தமிழினால் வாழவைக்கும் அம்மானை
வைதாலும் தமிழினால் வாழவைக்கும் என்பதுதான்
மெய்தான் எனின்தமிழ்க்கு மேன்மையன்றோ அம்மானை
தமிழ்க்குள்ள மேன்மை தமிழர்க்கும் அம்மானை (15)

முத்தமிழ்

குயில்மயில்போல் இன்பம் கொடுக்குமொரு மொழியென்றால்
இயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டும் அம்மானை
இயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டு மாயிடினே
பயில்தமிழ்அம் முச்சிறப்பும் படைத்துளதோ அம்மானை
சிலப்பதிகா ரத்தில்முச் சிறப்புமுள தம்மானை (16)

இயற்றமிழ்

புதுக்கியதேன் சுவைசொட்டும் புகழ்ச்சிமிக்க தமிழதனில்
மதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள அம்மானை
மதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள வானாலும்
ஓதுக்கலுறும் குப்பைகளும் உள்ளனவால் அம்மானை
உள்ளகுப்பை ஆரியத்தின் உதித்தனவாய் அம்மானை (17)


15. தெய்வத்தைத் தமிழால் வைதாலும் வாழ்வுண்டாகும்.

16- சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்னும் முச்சுவையும் அமைந்த செந்தமிழ் நூல்.

17. சில புராணக் குப்பைகள் ஆரியத்திலிருந்து தமிழ்க்கு வந்தன.