இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நன்கு பட்டை தீட்டப்பெற்றுச் சுடரொளி வீசும் வயிரம் போன்ற கருத்துகள் நிறைந்தது இந்நூல். மாந்தராகப் பிறந்த ஒவ்வொருவரிடமும் இவ்வொளி வீசுதல் வேண்டும் என்பதே என் உள்ளக்கிடக்கை
இதனை நம் இளைஞர்கள் நன்கு படித்துப் பயன்படுத்தி, அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த இம் மக்கள் கூட்டத்திற்கும் மிகவும் பயன்படக் கூடியவர்களாக விளங்குவார்களாக
தென்மொழி, சென்னை - 5 10-8-1982.
அன்பன்,
(பெருஞ்சித்திரனார்)