பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 தமிழகக் குறுநில வேந்தர் நீதிபதி சத்ரபதி சமஸ்தானபதி விஜயநிறைந் தேநிற்கு மாதுபதி துரகபதி கஜபதி நராதிபதி வளர்தென் றேவைச் சேகபதி தரிசனமே ராமலிங்க தரிசனமாச் செப்பலாமே" என்று வழங்கும் பழைய விருத்தத்தானும் நன்கறிந்து கொள்க.

  இவருடைய புண்ணியநாடு தமிழிற் பெரிய ஞானி கட்கு மிடமாய தென்பது, சைவத்திற் சிறந்த ஞானயோகி யாகிய ரீ, தாயுமானவர் நெடுநாள் தங்கிச் சமாதியடைந் தருளிய முகவையும், விசதவாக்சிகாமணியாய் வைஷ்ண வாசாரியராய்த் தெய்வமும் அழைத்துப்பேசுந் தூயஞான மும் உடைய மணவாளமாமுனிவர் வளர்ந்து சிறந்த சிக்கற் கடாரமும் தன்பாற்கொண்டுவிளங்குவதனற் பலரும் அறியத்தக்கது.
இவ்விரண்டு ஞானாசாரியர்களும் பாடியருளிய தமிழ்ப்பாடல்களின் பெருமை கற்றாரறிந்ததே. மணவாளமாமுனிவரைத் தெய்வம் அழைத்துப்பேசியருளிய செய்தி,

"நாமார் பெரியதிரு மண்டபமார் தம்பெருமான் தாமாக வென்னைத் தனித்தழைத்து-நீமாறன் செந்தமிழ் வேதத்தின் செழும்பொருளை நாளுமிங்கே வந்துரையென் லேவுவதே வாய்ந்து” என்று அவர் ஈடுபட் டோதியருளிய வெண்பாவா னறிந் தது. இவர் திருவாலியிற் றிருமங்கைமன்னனைச் சேவிக்கப் புக்கபோது பாடியருளிய பாடல் :- "ஈதோ திருவர சீதோ மனங்கொல்லை பீதோ திருவாலி யென்னுமூ-ரீதோதான்